Tuesday, September 3, 2013

நவ­நீ­தம்­பிள்ளை புலி­களை விமர்­சித்­தமை உலக மகா நடிப்பு: சம்­பிக்க ரண­வக்க!

Tuesday,September,03,2013
இலங்கை:.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை  புலி­களின் தீவிர ஆத­­வாளர். இவ­ரிடம் இலங்கை நீதி கேட்க நினைப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது.
 
நாட்­டுக்குள் நவ­நீ­தம்­பிள்­ளையை அனு­­தித்திருக்­கவே கூடாது. இலங்கை வெளிப்­படைக் கொள்­கை­யுடன் செயற்­பட்ட போதிலும் நவ­நீ­தம்­பிள்ளை புலிகளுக்கு ஆத­­வா­ நிலைப்­பாட்­டி­லி­ருந்தே கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்ளார் என்று ஜாதிக ஹெல உறு­­யவின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.
 
இலங்­கையின் உள்­ளக அர­சியல் விவ­கா­ரங்­களில் நவ­நீ­தம்­பிள்ளை தலை­யிட்­­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஒன்­றாகும். அதே­போன்று தமிழ் தேசி­யக்­கூட்­­மைப்­பி­னரின் பேச்சைக் கேட்டு சர்வதேச விசா­­ணைக்கு அழைப்பு விடு­வது எவ்­வி­தத்­திலும் நியாயம் இல்லை. தான் நேர்­மை­யா­னவள் என்­­தைக்­காட்­டிக்­கொள்ள போலி­யாக  புலி­களை விமர்­சித்­தமை உலக மகா நடிப்பு என்றும் அவர் குறிப்­பிட்டார்.
 
இலங்­கைக்கு எதி­ரான நிலைப்­பாட்­டி­லேயே நவ­நீ­தம்­பிள்ளை ஆரம்ப காலம் தொட்டே செயற்­பட்டார். இலங்கை விஜ­யத்தில் தனக்கு சாத­­மான சாட்­சி­­ளையும் தட­யங்­­ளையும் வடக்கு மட்டும் கிழக்­கிற்­கான விஜ­யத்தின் போது நவ­நீ­தம்­பிள்ளை சேக­ரித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்
 
எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் நடை­பெ­­வுள்ள .நா. மனித உரி­மைகள் அமர்வில் வாய்­மூ­­மான விளக்­­­ளிப்பை இலங்கை தொடர்பில் முன் வைப்பார். இதன் பின்னர்இ எதிர்­வரும் மார்ச் மாதம் அமர்வில் முழு அள­வி­லான அறிக்­கை­யினை இலங்­கைக்கு எதி­ராக நவ­நீ­தம்­பிள்ளை சமர்ப்­பிப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்
 
உண்­மையில் ஜெனீ­வாவில் தீர்­மா­னத்தை நிரா­­ரித்­தது போல் நவ­நீ­தம்­பிள்­ளையின் வரு­கை­­ளையும் இலங்கை நிரா­­ரித்­தி­ருக்க வேண்டும். ஏனெனில் நவ­நீ­தம்­பிள்ளை மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் பத­வியில் இருந்­தாலும் அவர் முழு அளவில் புலி­களின் ஆத­­வாளர் எனவும் குறிப்பிட்டார்
 
.நா. நிபுணர் குழு அறிக்­கையில் இலங்­கைக்கு எதி­ராக முன் வைக்­கப்­பட்­டுள்ள பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தடயங்களை தேடி அவ்வறிக்கையினை நியாயப்படுத்தி நெறிப்படுத்துவதே நவநீதம்பிள்ளையின் நோக்கமாகும் என்று தெரிவித்த சம்பிக்க ரணவக்க இதற்கு எந்த விதத்திலும் இடமளிக்க முடியாது எனக்கூறினார்.

No comments:

Post a Comment