Wednesday, September 25, 2013

ஒபாமா குடும்பத்துடன், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ குடும்பம்!

Wednesday, September 25, 2013
இலங்கை::ஐக்­கிய நாடு­கள் பேர­வையின் 68 ஆவது நிரந்­தர கூட்­டத்­தொ­டரில் கலந்து கொள்­வ­தற்­காக அமெரிக்கா சென்றுள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் அவரது பாரியார் சிரந்தி ராஜ­பக்ஷ, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சல் ஒபாமாவை சந்தித்தபோது.
 
2005ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய 6ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். முதலாவதாக 2006ஆம் ஆண்டு முதலாவதாக ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் உரை நிகழ்த்தினார்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றியதன் பின்னரே அவர் பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதனையடுத்து,.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியாரும் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷ,  அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது பாரியாரும் முதல் பெண்மணியுமான மிச்சேல் ஒபாமா ஆகியோர் நியூயோர்க்கில் வரவேற்பின் போது  சந்தித்துள்ளார்.

அத்துடன்,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஆசிய, ஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளின் அரச தலைவர்கள் சிலருடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

No comments:

Post a Comment