Wednesday, September 25, 2013
ராமேசுவரம்::ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த 41 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து 41 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று மீனவர்களின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை உடனே விடுதலை செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட 41 மீனவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இன்று மதியம் இந்திய கடலோர காவல் படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைக்கிறார்கள்.
விடுதலையான 41 மீனவர்களும் இன்று மாலை மண்டபம் திரும்புவார்கள் என்று தெரிகிறது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து 41 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று மீனவர்களின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை உடனே விடுதலை செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட 41 மீனவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இன்று மதியம் இந்திய கடலோர காவல் படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைக்கிறார்கள்.
விடுதலையான 41 மீனவர்களும் இன்று மாலை மண்டபம் திரும்புவார்கள் என்று தெரிகிறது.


No comments:
Post a Comment