Sunday, September 29, 2013

போலி காசோலை வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெருகல் பிரதேச சபைத் தலைவர் பிணையில்!

Sunday, September 29, 2013
இலங்கை::தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெருகல் பிரதேச சபைத் தலைவர் எஸ்.விஜயகாந்த நேற்று முன்தினம் (27) மாலை பெலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப் பட்டதாக பொலிஸார் தெரிவித்தார். காசோலை மோசடி குற்றச் சாட்டிலேயே அவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
 
பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதான திருத்த வேலைக்கு மண் தருவிப்பதற்கான ஒப்பந்தத்தில் லொறி சாரதி ஒருவருக்கு ஐந்து லெட்சம் என குறிக்கப்டப்பட்ட போலி காசோலை வழங்கியமை தொடர்பிலேயே பிரதேச சபை தலைவர் கைது செய்யபட்டுள்ளார்.
 
கைது செய்யப்பட்ட வெருகல் பிரதேச சபை தலைவரை மூதூர் நீதவான நீதிமன்னிறில் ஆஜர்படுத்தியபோது இரண்டு லெட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்தார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment