Friday, September 20, 2013
இலங்கை::வடமாகாணசபை வேட்பாளர் அனந்தி எழிலன் அம்மணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்! தனக்குப் படாமல் தாக்குதல் நடத்த சொன்ன பெண் வேட்பாளர் அம்மணி! கொலைகார புலிகளின் எழிலனின் மனைவி போலி பிரச்சாரம்!
சுழிபுரத்தில் அமைந்துள்ள (கொலைகார புலிகளின்) அனந்தியின் வீட்டை
சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதாகவும், அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
விடயம் அறிந்து வீட்டிற்கு வந்த ஆதரவாளர்கள் அவரை வற்புறுத்தி விட்டில் இருந்து வெளியேற்றி வேறு இடத்திற்கு அனுப்பிய சில நிமிடங்களில் அங்கு மீண்டும் வந்த ஆயுததாரிகளும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு 10 மேற்பட்ட ஆதரவாளர்கள் பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சில ஆதரவாளர்களுக்கு தலை உடைக்கப்பட்டு, கால் கைகள் முறிந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவித்த அனந்தி, இந்த தாக்குதலில் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதே வேளை இத் தாக்குதலில் கபே அமைப்பின் யாழ் மாவட்ட கண்காணிப்பாளரும் மனித உரிமைவாதியும், சட்டத்தரணியுமான சுபாஸ் உள்ளிட்ட பலர் காயம் அடைந்துள்ளனர்.
இலங்கை நேரம் அதிகாலை 2.:10மணியளவில் சம்பவ இடத்திற்கு தமிழ்த் தேசியக் (புலி) கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன், யாழ்மாவட்ட தேர்தல் ஆணையாளர் அச்சுதன் மற்றும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும், ஊடகவியலாளர்களும் ஸ்தலத்தில் இருப்பதாக அனந்தி உறுதிப்படுத்தினார்.


No comments:
Post a Comment