Saturday, September 28, 2013
சென்னை::இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த ஆறு
இலங்கை மீனவர்கள்,
நேற்று போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டனர்.
இந்திய கடல் பகுதியில் காரைக்கால் அருகே, கடந்த 25ம் தேதி கடலோர
காவல் படையை சேர்ந்த ரோந்து கப்பல் சுற்றி வந்த போது, இந்திய எல்லையில், இலங்கை
மீனவர்கள் ஆறு பேர் மீன்பிடித்து கொண்டிருந்தனர் . அவர்களை பிடித்த கடலோர
காவல்படையினர், நேற்று மாலை சென்னை துறைமுக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும்,
இலங்கை மீனவர்கள் பயன்படுறறத்திய படகு மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த 400
கிலோ மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று மாலை நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்ட இலங்கை மீனவர்கள் ஆறுபேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment