Tuesday, September 24, 2013

தமிழ்த் தேசிய மக்கள் (புலி) முன்னணியின் பொதுச் செயலாளர் புலனாய்வுப் பிரிவினரால் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு!

Tuesday, September, 24, 2013
இலங்கை::தமிழ்த் தேசிய மக்கள் (புலி)முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனை யாழ். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக செல்வராசா கஜேந்திரனுக்கு கடிதம் மூலம் இன்று (24) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் நாளை  காலை 10 மணிக்கு யாழ். பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு அழைக்கப்பட்டமைக்கான காரணம் குறிப்பிடப்படவில்லை என செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். 

 

No comments:

Post a Comment