Friday, September 6, 2013

புலம்­பெ­யர்ந்து வாழும் புலிகள் இலங்­கைக்குள் மீண்டும் செயற்­பட சந்­தர்ப்பம் தேடு­கின்­றனர்: ரொஹான் குண­ரட்ன!

Friday, September 06, 2013
இலங்கை::புலிகளின்  நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்­துடன் கூட பேச்­சு­வார்த்தை நடத்த இலங்கை அர­சாங்கம் தயா­ரா­கவே உள்­ளது .யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் திறந்த கொள்­கை­யு­ட­னேயே செயற்­பட்­டது.
 
ஆனால் அவற்றை தவ­றாக அர்த்­தப்­ப­டுத்­திய சர்­வ­தேச பார்­வையே இலங்கை மீதும் காணப்­ப­டு­கின்­றது.என தேசிய பாது­காப்பு கொள்­கைகள் மற்றும் பயங்­க­ர­வாத ஒழிப்பு தொடர்பான ஆலோ­சகர் கலா­நிதி ரொஹான் குண­ரட்ன தெரி­வித்தார்.
 
யுத்­தத்தின் இறுதிக் காலப்­ப­கு­தியில் பல்­லா­யிரம் தமி­ழர்கள் கொல்­லப்­பட்­டார்கள் என்­பது போலி­யான பிர­சா­ர­மாகும். 2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் தொடக்கம் மே மாதம் யுத்தம் முடி­வ­டையும் வரை வடக்கில் 7 ஆயிரம் பேர் மாத்­தி­ரமே கொல்­லப்­பட்­டனர். இவர்­களில் 5 ஆயிரம் பேர் விடு­தலைப் புலி உறுப்­பி­னர்கள் என்­பதே உண்மை.
 
புலம்­பெ­யர்ந்து வாழும் புலிகள் இலங்­கைக்குள் மீண்டும் செயற்­பட சந்­தர்ப்பம் தேடு­கின்­றனர். 10 வீத­மான தமி­ழர்கள் சர்­வ­தே­சத்தில் வாழும் புலி­க­ளுடன் தொடர்பு வைத்­துள்­ளனர். ஆகவே இலங்­கைக்கு பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் குறைந்­துள்­ள­தாக கூற முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.
 
சர்­வ­தேச பாது­காப்புச் செய­ல­மர்வின் இறுதி நாளான நேற்று வியா­ழக்­கி­ழமை கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே கலா­நிதி ரொஹான் குண­ரட்ன மேற்­கண்­ட­வாறு கூறினார்.

No comments:

Post a Comment