Tuesday, September 10, 2013

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தின் 24ம் கூட்டத்தொடரில் புலிகளின் அமைப்புகளான BTF , CTC கலந்துகொள்கின்றன!

Tuesday, September 10, 2013
இலங்கை::ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தின் 24ம் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக புலிகளின் பிரித்தானியத் தமிழர் பேரவையின் மனித உரிமைக்கான குழுவொன்று ஜெனீவாவுக்கு நேற்றைய தினம் சென்றடைந்துள்ளது.
 
புலிகளின் கனடியன் தமிழ் காங்கிரஸ் (CTC ), புலிகளின் ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த தமிழ் அரசியல் நடவடிக்கை மன்றம் (USTPAC) ஆகிய  அமைப்புகளோடு இணைந்து புலிகளின் பிரித்தானியத் தமிழ் பேரவையானது பல அரசியல் நுண் நகர்வுகளை செயற்படுத்தி வருகிறது.
 
எதிர்வரும் 27ம் திகதி நிறைவு பெறவிருக்கும் இக் கூட்டத்தொடரில், அண்மையில் இலங்கை சென்று வந்துள்ள மனித உரிமை ஆணையத்தின் உயர் ஸ்தானிகர் நவிப்
பிள்ளை அவர்கள் வாய் மூல அறிக்கை ஒன்றை சமர்பிக்கவுள்ளார்.
 
 

No comments:

Post a Comment