Friday, August 30, 2013

ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளைக்கு கண் தெரிந்­தி­ருந்தால் வடக்கில் யுத்­தத்தின் பின்னர் ஏற்­பட்­டுள்ள அனைத்து முன்­னேற்­றங்­க­ளையும் கண்­டி­ருப்பார்: அமைச்சர் மஹிந்தசம­ர­சிங்க!

Friday, August 30, 2013
இலங்கை::.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளைக்கு கண் தெரிந்­தி­ருந்தால் வடக்கில் யுத்­தத்தின் பின்னர் ஏற்­பட்­டுள்ள அனைத்து முன்­னேற்­றங்­­ளையும் கண்­டி­ருப்பார். ஏனெனில் கண்­ணுள்ள அனை­வரும் இந்த முன்­னேற்­றங்­களை  பார்த்­துள்­ளனர்
 
எவ்­வா­றா­யினும் நாட்டில் மனித உரி­மைகள் தொடர்­பி­லான தேசிய திட்ட வரைபு கண்­டுள்ள முன்­னேற்­றங்­களை நவ­நீ­தம்­பிள்­ளைக்கு தெளி­வு­­டுத்­தி­யுள்ளோம் என்று பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்­சரும் ஜனா­தி­­தியின் மனித உரிமை விவ­கா­ரங்­­ளுக்­கான பிர­தி­நி­தி­யு­மான அமைச்சர் மஹிந்தசம­­சிங்க தெரி­வித்தார்
 
சர்­­தேச தலை­வர்கள் நாட்­டுக்குள் வரும் போது இலங்கை தொடர்பில் தப்­பான அபிப்­பி­ரா­யங்­களை ஏற்­­டுத்த பல குழுக்கள் செயற்­­டு­கின்­றன. வடக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட  காணாமல் போனோர் தொடர்­பான போராட்­டங்­களும் அவற்றில் ஒன்­றாகும்
 
சவால்­களை எதிர்­கொள்ள நாம் தயா­ரா­கவே உள்ளோம். .நா. மனித உரிமைப் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ரான நிலைப்­பாட்டில் அனைத்து நாடு­களும் இல்லை. எனவே தான் அமெ­ரிக்­காவின் தீர்­மானம் பெரும்­பான்­மையில் வெற்றி பெற­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.
 
இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள .நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர்
நவ­நீ­தம்­பிள்ளை, அமைச்சர் மஹிந்த சம­­சிங்­கவை நேற்று முற்­பகல் அமைச்சில் சந்­தித்து மனித உரிமை விவ­கா­ரங்­களின் முன்­னேற்றம் குறித்து கேட்­­றிந்து கொண்டார் என்றார்
 
இலங்­கையில் யுத்தம் முடி­­டைந்த பின்னர் கண்­டுள்ள முன்­னேற்­றங்கள்
தொடர்­பிலும் மனித உரி­மை­களை பாது­காப்­பது தொடர்­பிலும் இலங்கை கண்­டுள்ள முன்­னேற்­றங்­களை மிகவும் தெளி­வாக வெளிப்­­டுத்­தினோம் எனச் சுட்டிக்காட்டினார்
 
இதனை மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையின் குழு நன்கு விளங்கிக் கொண்­டது. குறிப்­பாக நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்ற அமைச்­சுக்­களும் அரச நிறு­­னங்­களும் முன்­னெ­டுத்­துள்ள நட­­டிக்­கைகள் தொடர்பில் அறிக்­கை­­ளையும் சமர்ப்­பித்தோம் எனவும் குறிப்பிட்டார்
 
அதே­போன்று பரிந்­து­ரைக்கு அமை­வா­கவும் மனித உரி­மை­களை பாது­காப்­­திலும் அரசு மேற்­கொண்ட தேசிய திட்ட வரைபையும் அது கண்­டுள்ள வெற்­றி­யையும் எடுத்­து­ரைத்தோம். உறுதிமொழி­களை பாது­காக்க காலம் கடத்­தவோ 2012 ஆம் ஆண்டில் நடை­பெ­­வுள்ள மனித உரி­மைகள் தொடர்­பி­லான பூகோள மீளாய்வுக் கூட்டத் தொடர் வரையும் காத்துக் கிடக்­கவோ போவ­தில்லை.
 
இலங்கை விஜயம் தொடர்பில் .நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை எதிர்­வரும் செப்­டெம்பர் மாத அமர்வில் அறிக்­கை­யினை சமர்ப்­பிப்பார்அப்­போது நவ­நீ­தம்­பிள்­ளையை நாங்கள் அங்கு வைத்து சந்­திப்போம். யுத்த காலப் பகு­தியில் லுயிஸ்­ஆபர் போன்­­வர்கள் வந்த போதிலும் இதே­போன்று பாரிய மனித உரி­மைகள் மீறல்கள் இடம்­பெற்­­தாகக் கூறி போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தனர் எனத் தெரிவித்தார்
 
இன்றும் அதே நிலையே உள்­ளது. உற­வு­களை காண­வில்லை என்று அழுது புலம்பி ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­கின்­றனர். இவை திட்­­மிட்ட நட­­டிக்­கை­­ளாகும். அர­சாங்­கத்தை பொறுத்த வரையில் தேசிய பாது­காப்பே முக்­கி­­மா­னது. வடக்கு விஜயம் தொடர்பில் நவ­நீ­தம்­பிள்ளை ஒன்றும் கூறவில்லைஎனவும் தெரிவித்தார்
 
அவருக்கு கண்ணிருந்தால் அப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் கண்டிருப்பார். ஏனெனில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடம் என்ற குறுகிய காலப்பகுதியில் வடபகுதி கண்டுள்ள முன்னேற்றங்கள் கண்ணுள்ள அனைவருக்கும் தெரியும் எனக் கூறினார்.

No comments:

Post a Comment