Friday, August 30, 2013

30 வரு­ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யமாட்டோம் : நவிப்பிள்ளையிடம்: வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்பீரிஸ் உறுதி!

Friday, August 30, 2013
இலங்கை::கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வலி­யு­றுத்­தி­யுள்ள ஐக்­கிய நாடு­களின் சபையின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை மனித உரிமை மீறல் விட­யங்­க­ளுக்­கெ­தி­ராக அரசு மேற்­கொண்­டுள்ள சட்ட நட­வ­டிக்கை தொடர்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரி­ஸிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.
 
ஆறுநாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்­றினை மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள ஐக்­கிய நாடு­கள் சபையின் மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளைக்கும் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரி­ஸுக்­கு­மி­டை­யி­லான விஷேட சந்­திப்­பொன்று நேற்று வெளி­வி­வகார அ­மைச்சில் இடம்­பெற்­றது. இதன்­போதே நவ­நீ­தம்­பிள்ளை நல்­லி­ணக்க ஆணைக்­குழு பரிந்­து­ரை­களை அமுல் செய்­வது மற்றும் மனித உரி­மைகள் விட­யங்­க­ளுக்கு எதி­ரான சட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து அமைச்­ச­ரிடம் கேள்வி எழுப்­பினார்.
சம­யங்­க­ளுக்­கி­டை­யி­லான குரோத மனப்­பாங்கை வளர்க்கும் செயற்­பா­டுகள்இ கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் விவ­காரம்இ சட்டம் ஒழுங்கு தொடர்­பான புதிய அமைச்சின் உதயம் பயங்­க­ர­வாத தடுப்பு சட்டம் தொடர்­பிலும் இதன்­போது நவ­நீ­தம்­பிள்ளை வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரி­ஸிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.
 
குறித்த விட­யங்­க­ளுக்கு பதி­ல­ளித்­துள்ள அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் சர்­வ­தேச நாடுகள் சில இலங்­கைக்கு எதி­ராக கொண்­டுள்ள நிலைப்­பா­டு­களை விமர்­சித்­த­துடன் மனித உரிமை மீறல் விட­யங்கள் தொடர்பில் முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களை மறுத்தார். அத்­துடன் நீதித்­துறை தொடர்பில் எழுப்­பப்­பட்டு வரும் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆதா­ரங்­களின் அடிப்­ப­டையில் எந்­த­வித தகுதி தரா­த­ரங்­களும் பாராது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டினார்.
 
திரு­கோ­ண­ம­லையில் ஐந்து மாண­வர்கள் கொல்­லப்­பட்­டமை, அரச சார்­பற்ற நிறு­வன ஊழி­யர்­களின் படு­கொலை தொடர்­பி­லான விசா­ர­ணை­களை சுட்­டிக்­காட்­டிய அமைச்சர் சாட்­சி­களின் அடிப்­ப­டையில் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­வித்தார்.
 
பயங்­க­ர­வாத தடைச் சட்டம் தொடர்­பாக தொடுக்­கப்­பட்ட வினா­வுக்கு பதி­ல­ளித்த அமைச்சர் 30 வரு­டங்­க­ளாக அமு­லி­லுள்ள குறித்த சட்­ட­மா­னது திருத்­தப்­பட்ட நிலையில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கவே பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் அதனை அரசு ஒரு­போதும் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­போ­வ­தில்­லை­யென்றும் உறு­தி­ய­ளித்தார்.
 
கம்­பஹா, வெலி­வே­ரிய பகு­தியில் பொது மக்கள் ஆர்ப்­பாட்­டம்­மீது இரா­ணுவம் மேற்­கொண்­ட­தாக கூறப்­படும் துப்­பாக்கிப் பிர­யோகம் தொடர்பில் இதன்­போது விரி­வாக ஆரா­யப்­பட்­டது. குறித்த சம்­பவம் தொடர்பில் பல் ேவறு கோணங்­களில் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ரிடம் சுட்­டிக்­காட்­டிய அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அது தொடர்பில் காலம் தாழ்த்­தாது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தெரி­வித்தார்.
 
அத்­துடன்இ கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் விவ­கா­ரப் தொடர்­பிலும் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரும் நிலையில் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் எனவும் அவர் உறு­தி­ய­ளித்தார்.
 
இதே­வேளை பொலிஸ் திணைக்­களம் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டமை தொடர்பில் நவ­நீ­தம்­பிள்ளை அமைச்சர் ஜி.எல்.பீரி­ஸிடம் கேள்வி எழுப்­பினார். இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுவரை பொலிஸ் திணைக்­களம் உள்­துறை அமைச்சின் கீழ் செயற்­பட்­டதை சுட்­டிக்­காட்­டி­ய­துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே அது தற்போது சட்டம் ஒழுங்கு என்ற புதிய அமைச்சின் கீழ் கொண்டுவந்ததாக சுட்டிக்காட்டினார்.
 
எனினும் பொலிஸ் திணைக்களத்தை நீதியமைச்சின் கீழ் வைத்திருக்கலாம் என ஆலோசனை தெரிவித்த நவநீதம் பிள்ளை சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் அதனை கொண்டுவந்ததற்கு தனது அதிருப்தியை தெரிவித்தார்.

No comments:

Post a Comment