Thursday, August 22, 2013

வட மாகாண சபைத் தேர்­தலில் ஆளும் கட்சி வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்து விடு­வ­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு திட்­ட­மிட்டு பிரசாரம்: பஷில் ராஜ­பக்ஷ!

Thursday, August 22, 2013
இலங்கை::வட மாகாண சபைத் தேர்­தலில் ஆளும் கட்சி வன்­மு­றை­களை கட்­­விழ்த்து விடு­­தாக தமிழ்த் தேசியக் கூட்­­மைப்பு திட்­­மிட்டு பிரசாரம் செய்­து­­ரு­கின்­றது. ஆளும் கட்­சி­யி­னரை ஆத்­தி­­மூட்டும் வகையில் கூட்­­மைப்பு இவ்­வாறு பிர­சா­ரங்­களைசெய்­­போ­திலும் நாங்கள் மிகவும் நிதா­­மாக நடந்­து­கொள்­கின்றோம் என்று பொருளா­தார அபி­வி­ருத்தி அமைச்­­ர் பஷில் ராஜ­பக்ஷ  தெரி­வித்தார்.
 
ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை போன்றோர் இலங்கை வர­வுள்ள நிலையில் இவ்­வாறு நாட்டில் அமை­தி­யில்லை என்று காட்­டு­­தற்கு கூட்­­மைப்பு முயற்­சிக்­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.
 
தற்­போது ஆளும் கட்­சியின் அலு­­­கங்கள் மீதும் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. சுயா­தீன கண்­கா­ணிப்­பா­ளர்கள் என்ற பெயரில் சிலர் வெளி­ நா­டு­­ளி­லி­ருந்து பணத்தைப் பெற்­றுக்­கொண்டு அர­சாங்­கத்­துக்கு எதி­ராக செயற்­பட்­டு­ ­ரு­கின்­றனர் என்றும் அமைச்சர் பஷில் ராஜ­பக் கூறினார்.
வடக்குத் தேர்தல் நிலை­மைகள் மற்றும் வன்­மு­றைகள் இடம்­ பெ­று­­தாக தெரி­விக்­கப்­­டு­கின்ற விட­யங்கள் குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­­வாறு கூறினார்.
 
ஆளும் கட்சி வடக்கில் வன்­மு­றை­களை மேற்­கொள்­­தாக தமிழ்த் தேசியக் கூட்­­மைப்­பினர் திட்­­மிட்டு பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­து­ ­ரு­கின்­றனர். இணை­­ ­ளங்­களில் இவ்­வாறு செய்­தி­களை வெளி­யிட்­டு­­ரு­கின்­றன எனவும் குறிப்பிட்டார்
 
இது­போன்ற பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு ஆளும் கட்­சி­யி­னரை ஆத்­தி­­மூட்டும் செயற்­பா­டு­களில் கூட்­­மைப்­பினர் திட்­­மிட்ட ரீதியில் ஈடு­பட்­டு­­ரு­கின்­றனர் என்று பசில் ராஜபக்ச குற்றம் சாட்டினார்.

No comments:

Post a Comment