Thursday, August 15, 2013
இலங்கை::நாடுகடந்த தமிழீழ அரசுடன் உள்நாட்டில் பலர் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர் என புலனாய்வு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அண்மையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நான்கு பேர் மேற்படி அமைப்பின் செயலமர்வு ஒன்றிலும் கலந்துகொண்டுள்ளனர். அதேபோன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான இரா. சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கனடாவுக்கு சென்று நாடு கடந்த தமிழீழ அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அரசியலமைப்பை மீறும் செயல் என்பதுடன் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலான விடயமாகும் என்று கூட்டுபடைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாகும். பொதுநலவாய மாநாடு , நவநீதம்பிள்ளையின் வருகை, வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் அமர்வுகள் என்பவைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனை குழப்பியடிக்க உள்நாட்டில் பலரும் செயற்படுகின்றனர். ஆகவே, ஊடகங்கள் தேசிய பாதுகாப்புக்கும் நாட்டின் நற்பெயருக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டும். முப்படைகள் தொடர்பாக பொதுமக்கள் மதிப்பை இழந்துவிட்டால் நாட்டில் சமாதானத்தையும் நீதியையும் பாதுகாப்பது சவாலாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப கட்டிட தொகுதியில் அமைந்துள்ள கூட்டு படைகளின் தலைமையதிகாரி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடுகையிலேயே ஜெனரல் ஜகத்சூரிய மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த நான்கு வருட காலத்தில் பொலிஸார் உள்ளிட்ட முப்படையினர் நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டனர். தற்போது இராணுவ தளபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்று கூட்டுப்படைகளின் பதவிக்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளேன். தற்போது எனது பொறுப்புகள் வேறுபட்டுள்ளது. அதாவது, பொலிஸ் உள்ளிட்ட முப்படைகளுடன் முறையான தொடர்பாடல்களை மேற்கொண்டு அதனை பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்தல் எமது கடமையாகும்.
எதிர்வரும் பொதுநலவாய மாநாட்டில் இராணுவத்தினருக்கு பாரிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வரும் அரச தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் என்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் வாகன ஒழுங்குகள் மேற்கொள்ளல் உட்பட பல்வேறு விடயங்கள் பாதுகாப்பு தரப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இவருடைய பாதுகாப்பு விடயங்கள் இராணுவத்திடம் கையளிக்கப்படவுள்ளதுடன் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ நவநீதம்பிள்ளையை சந்தித்து இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளார். இதன்போது இராணுவம் சார்பாகவும் விளக்கமளிப்புகள் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாகும். பொதுநலவாய மாநாடு , நவநீதம்பிள்ளையின் வருகை, வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் அமர்வுகள் என்பவைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனை குழப்பியடிக்க உள்நாட்டில் பலரும் செயற்படுகின்றனர். ஆகவே, ஊடகங்கள் தேசிய பாதுகாப்புக்கும் நாட்டின் நற்பெயருக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டும். முப்படைகள் தொடர்பாக பொதுமக்கள் மதிப்பை இழந்துவிட்டால் நாட்டில் சமாதானத்தையும் நீதியையும் பாதுகாப்பது சவாலாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப கட்டிட தொகுதியில் அமைந்துள்ள கூட்டு படைகளின் தலைமையதிகாரி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடுகையிலேயே ஜெனரல் ஜகத்சூரிய மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த நான்கு வருட காலத்தில் பொலிஸார் உள்ளிட்ட முப்படையினர் நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டனர். தற்போது இராணுவ தளபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்று கூட்டுப்படைகளின் பதவிக்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளேன். தற்போது எனது பொறுப்புகள் வேறுபட்டுள்ளது. அதாவது, பொலிஸ் உள்ளிட்ட முப்படைகளுடன் முறையான தொடர்பாடல்களை மேற்கொண்டு அதனை பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்தல் எமது கடமையாகும்.
எதிர்வரும் பொதுநலவாய மாநாட்டில் இராணுவத்தினருக்கு பாரிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வரும் அரச தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் என்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் வாகன ஒழுங்குகள் மேற்கொள்ளல் உட்பட பல்வேறு விடயங்கள் பாதுகாப்பு தரப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இவருடைய பாதுகாப்பு விடயங்கள் இராணுவத்திடம் கையளிக்கப்படவுள்ளதுடன் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ நவநீதம்பிள்ளையை சந்தித்து இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளார். இதன்போது இராணுவம் சார்பாகவும் விளக்கமளிப்புகள் இடம்பெறவுள்ளது.
அதேபோன்று வடமாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. இதுதொடர்பிலும் கூட்டு படைகளின் தலைமையதிகாரியென்ற வகையில் அவதானத்துடன் செயற்படுகின்றேன். மேலும் எதிர்வரும் நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி நாட்டின் நற்பெய ரை பாதுகாத்து எதிர்வரும் சவால்களை முறியடிக்கவும் செயற்பட வேண்டியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை ஆயுத ரீதியிலான பயங்கரவாத போராட்டம் முழு அளவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், சர்வதேசத்தில் புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்கள் இன்னும் தமிழீழ போராட்டத்தை பல்வேறு வழிகளில் முன்னெடுக்கின்றனர். குறிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசை அமைத்துக் கொண்டு இலங்கைக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றனர். இவர்களே இலங்கையில் நடைபெறுகின்ற பொதுநலவாய மாநாட்டிற்கு ஏனைய நாடுகளின் தலைவர்கள் செல்லக்கூடாதென்றும் வலியுறுத்துகின்றனர்.
அண்மையில் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்களின்படி யாழ். மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் உள்ளிட்ட குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு விரிவுரையாளர்கள் ஆராய்ச்சிக்கென கூறி கடந்த 12ஆம் திகதி இங்கிலாந்து சென்று அங்கு நடைபெறுகின்ற நாடு கடந்த தமிழீழ அரசின் செயலமர்வு ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை அங்கு இருப்பார்கள் என தெரியவந்துள்ளது. அதேபோன்று கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கனடாவுக்கு சென்று மேற்படி அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர். இவ்வாறு விடயங்கள் நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடுகளாகும் இவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தேசிய பாதுகாப்பும் நாட்டின் நற்பெயரையும் பாதுகாக்க வேண்டியது முதன்மையான கடமையாகும். நாட்டில் குழப்பகரமான சூழ்நிலைகள் ஏற்படும்போது அதனை ஊடகங்கள் பொறுப்புடன் அறிக்கையிட வேண்டும். குறிப்பாக வெலிவேரிய சம்பவம், கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம் மற்றும் கோட்டை புகையிரத நிலையத்தில் எதிர்க்கட்சி முன்னெடுக்கின்ற ஆர்ப்பாட்டம்போன்ற விடயங்கள் பொதுநலவாய மாநாட்டை சீர்குலைப்பதற்காக முன்னெடு க்கப்படுகின்ற திட்டங்களாகவும் காண ப்படுகின்றன. எந்தவொரு சந்தர்பங்களிலும் முப்படைகள் தொட ர்பில் தவறான அபிப்பிராயத்தை பொதுமக்கள் மத்தியில் ஊடகங்கள் ஏற்படுத்திவிடக்கூடாது. அது தேசிய பாதுகாப்பிற்கு மாத்திரமல்லாது நிலை யான அமைதிக்கும் சவாலாகிவிடும் எனக்கூறினார்.

No comments:
Post a Comment