Monday, August 26, 2013
ராமேஸ்வரம்::மன்னார் வளைகுடா பகுதியில் இன்று காலை மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இதனால், ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் பரபரப்பு நிலவியது.
ராமேஸ்வரம்::மன்னார் வளைகுடா பகுதியில் இன்று காலை மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இதனால், ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் பரபரப்பு நிலவியது.
ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 106 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று, அந்நாட்டு சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் உள்ள மீனவர்கள் தங்களின் விடுதலையை எதிர்பார்த்து நாட்களை கழித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகள், இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் பாம்பன் கடல் பகுதியில் இருந்து மீனவர்கள் வில்சன், மச்சிநாதன், கொலம்பஸ் உள்பட 4 பேரின் விசைப்படகுகளில் 35 மீனவர்கள், இன்று காலையில் மன்னார்& தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட 35 மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாம் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களிடம் இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 106 மீனவர்கள் விடுவிக்கப்படாத நிலையில் 35 மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டது ராமேஸ்வரம், பாம்பன் பகுதி மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மத்திய, மாநில புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனிடையே ராமேஸ்வரத்தில் இருந்து இன்று வழக்கம் போல் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர். கடலுக்குச் சென்ற மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டிச் செல்லவேண்டாமென இந்திய கடற்படை மற்றும் தமிழக மீன்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment