Monday, July 15, 2013

ஜெனிவா மனித உரி­மைகள் பேரவை மாநாட்டில் இலங்­கைக்கு எதி­ராக வாக்­க­ளித்த நாடு­களின் பிர­தி­நி­திகள் எதிர்­வரும் வட­மா­காண சபை தேர்­தலில் கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளாக செயற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது: தேசிய சுதந்­திர முன்­னணி!

Monday, July 15, 2013
இலங்கை::ஜெனிவா மனித உரி­மைகள் பேரவை மாநாட்டில் இலங்­கைக்கு எதி­ராக வாக்­க­ளித்த நாடு­களின் பிர­தி­நி­திகள் எதிர்­வரும் வட­மா­காண சபை தேர்­தலில் கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளாக செயற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது என்று தேசிய சுதந்­திர முன்­னணி அர­சிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

இது குறித்து அக்­கட்சி விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளதாவது;

வடமேல், மத்­திய மற்றும் வட­மா­காண சபை தேர்­தல்கள் நீதி­யா­னதும் நியா­ய­மா­ன­து­மாக நடத்­தப்­பட வேண்­டு­மென்­பதே எமது கட்­சியின் எதிர்­பார்ப்­பாகும். இந்­நி­லையில் இத்­தேர்­தலின் போது சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள் கண்­கா­ணிப்பில் ஈடு­ப­டு­வது குறித்து அனை­வ­ரி­னதும் கவனம் திரும்­பி­யுள்­ளது.
கடந்த காலங்­களில் ஐ.நா. மனித உரி­மைகள் மாநாட்டின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றங்கள் இடம்­பெற்­ற­தாக கூறி இலங்­கைக்கு எதி­ராக வாக்­க­ளித்த மேற்­கத்­தேய நாடு­களின் பிரதி நிதிகள் இக்­கண்­கா­ணிப்பு குழுவில் இடம்­பெ­று­கின்­றனர். ஆகவே குறித்த நாடு­களின் பிர­தி­நி­திகள் தேர்­தலை கண்­கா­ணிப்­ப­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது.
 
குறித்த பிரதிநிதி­களை தேர்தலை கண்­கா­ணிப்­ப­தற்கு இட­ம­ளித்­தோ­மே­யானால் இந்த தேர்தல் குறித்து பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை சர்­வ­தே­சத்­துக்கு எடுத்துச் செல்ல இவர்கள் முற்­ப­டு­வார்கள்.
இது குறித்து கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று இடம்­பெற்ற தேர்தல் ஆணையாளருடனான கலந்துரையாடலின் போது ஆலோசனை வழங்கியுள்ளோம். சர்வதேச கண்காணிப்பாளர்கள் குறித்து அனைத்து கட்
சிகள் மற்றும் அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment