Wednesday, July 17, 2013

புலி பிரதிநிதித்துவத்தை மறைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி: குணதாஸ அமரசேகர!

Wednesday, July 17, 2013
இலங்கை::இந்தியாவின் றோ உளவுப் பிரிவின் ஆலோசனையும் சம்பந்தனின் அரசியல் வியூகமும் இணைந்தே முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனை வடமகாண சபையின் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியதன் பின்னணியாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர குற்றம் சாட்டினார்.

சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படக்கூடிய விக்னேஸ்வரனை நியமித்ததன் மூலம் கூட்டமைப்பு தனது விடுதலைப்புலி பிரதிநிதித்துவத்தை மறைக்க முனைந்துள்ளதாகவே அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக டாக்டர் குணதாஸ அமரசேகர மேலும் தெரிவித்ததாவது,

மாவை சேனாதிராஜா முழுக்க முழுக்க புலிகளின் ஆதரவாளர்.

இதனை அனைவரும் அறிவார்கள்.

விசேடமாக இந்தியாவுக்கு இது நன்றாகத் தெரியும்.

அத்தோடு இலங்கையில் தனித் தமிழீழம் உருவாவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது.

எனவே மாவை சேனாதிராஜாவை வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவையை நிறுத்துவதை இந்தியா விரும்பாது.

தேசிய நல்லிணக்கம்

அதேவேளை, விக்னேஸ்வரனின் இரண்டு மகன்மாரும் சிங்களப் பெண்களையே மணந்துள்ளனர்.

இது மட்டுமல்லாது உயர் பதவி வகித்த படித்தவர், இதனை சர்வதேசத்திற்கு கூட்டமைப்பு எடுத்துக்கூறும்.

விக்னேஸ்வரனால் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் படித்த புத்திஜீவி சர்வதேசத்துடன் ஒத்துப்போகக் கூடியவர் என்பதையும் கூட்டமைப்பினால் எடுத்தியம்ப முடியும்.

இதுதான் சம்பந்தனின் தந்திரமான வியூகம்.

எனவே இந்தியாவின் உறவுப் பிரிவான ‘‘றோ’’ வின்ஆலோசனையும் சம்பந்தனின் தந்திரமான அரசியல் வியூகமுமே விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது பயங்கரமான நாட்டுக்கு ஆரோக்கியமற்ற சூழ்நிலையாகும்.

எனவே, ஜனாதிபதி இதனை தடுத்து நிறுத்த அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும்.

விக்னேஸ்வரனுக்கு அமைச்சர் பதவியோ அல்லது வெளிநாட்டு தூதுவர் பதவியையோ வழங்கி முதலமைச்சர் வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

No comments:

Post a Comment