Friday, June 14, 2013

அமைச்சர் ரவுப் ஹக்கீம் TNA, நோர்வே போன்றவற்றின் அடிவருடியாக செயற்படுகிறார்: அமைச்சர் விமல் வீரவன்ச!

Friday, June 14, 2013
இலங்கை::மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் தலைவராக இருந்த காலத்தில் ஒருபோதும்  வட கிழக்கின் ;;இணைப்பை விரும்பவில்லை அத்துடன் ராஜிவ், ஜே.ஆர் ஒப்பந்தம் செய்யும்போது முஸ்லீம்களை கணக்கில் எடுக்காமல்  வட கிழக்கு இணைக்கப்பட்டதை அமைச்சர் அஸ்ரப் அன்று எதிர்தார். அதற்காகவே முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கோட்டை ரெயில்வே நிலையத்திலும் தனது கட்சிக் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலும் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அஷ்ரப் ஒருபோதும் வடகிழக்கு இணைப்பை விரும்பவில்லை. அவர் கிழக்கையும் தெற்கையும் இணைக்கும் தொடர்பே அவர் தீர்வாக விரும்பினார்.

சிறிது காலம் சென்ற பின் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை விட்டு விட்டு நுஆ என்ற கட்சியை ஆரம்பித்தார்.  அவர் 13வது சர்த்தையும்  எதிர்த்த ஒரு அரசியல்வாதியாகவே செயல்பட்டார் எனவும் அமைச்சர்   விமல் வீரவன்ச தெரிவித்தார்.

வட-கிழக்கு இணைந்திருந்தாhல் தான் அவர் முஸ்லீம் தனி அலகு கேட்டதாகவும்  அமைச்சர் விமல் நேற்று கோட்டே ரெயில்வே நிலையத்திற்கு முன்பாக உரையாற்றினார்.

ரீ.என்.ஏ மற்றும் டயஸ்போர மற்றும் நோர்வே போன்ற மேலைத்தேய நாடுகளின் அடிவருடியாகவும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் செயல்படுகின்றார்.
கிழக்கு வடக்கு வாழ் முஸ்லீம்களை ஹக்கீம் பிழையனதொரு முறைக்கு  எ
டுத்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்..

No comments:

Post a Comment