சென்னை::ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளப்படி தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டுவது இந்தியாவின் கடமை. இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்' என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வன் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், பொன் செல்வராசா ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பு தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வட மாகாண சபைத தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே அரசியல் 13-ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றன.
அதை தடுத்து நிறுத்த இந்தியா விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இலங்கையில் தமிழ் இனம் அழிந்துவிடும்.
ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளப்படி தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டுவது இந்தியாவின் கடமை.
இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இலங்கையில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இருவரிடமும் எடுத்துரைத்தோம்.
அதைக் கேட்ட பிரதமர் மன்மோகன் சிங், 'இலங்கைத் தமிழர்களைக் கைவிட மாட்டோம். அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழர்களுக்கு அநீதி நடைபெறுவதை இந்தியா அனுமதிக்காது' என்று உறுதியளித்தார்.
அவரது வாக்குறுதிகள் செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இலங்கை செல்கிறோம்.
தற்போதைய சூழ்நிலையில், 13-ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றம் தொடர்பாக இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள பேச்சுவார்த்தையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது' என்று கூறியுள்ளார். சம்பந்தன்.
பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பு தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வட மாகாண சபைத தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே அரசியல் 13-ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றன.
அதை தடுத்து நிறுத்த இந்தியா விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இலங்கையில் தமிழ் இனம் அழிந்துவிடும்.
ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளப்படி தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டுவது இந்தியாவின் கடமை.
இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இலங்கையில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இருவரிடமும் எடுத்துரைத்தோம்.
அதைக் கேட்ட பிரதமர் மன்மோகன் சிங், 'இலங்கைத் தமிழர்களைக் கைவிட மாட்டோம். அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழர்களுக்கு அநீதி நடைபெறுவதை இந்தியா அனுமதிக்காது' என்று உறுதியளித்தார்.
அவரது வாக்குறுதிகள் செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இலங்கை செல்கிறோம்.
தற்போதைய சூழ்நிலையில், 13-ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றம் தொடர்பாக இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள பேச்சுவார்த்தையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது' என்று கூறியுள்ளார். சம்பந்தன்.

No comments:
Post a Comment