Sunday, June 30, 2013

தன்சானியா தார் ஸ் சலாம் நகரில் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Sunday, June 30, 2013
இலங்கை::இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தவறானவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மலேஷிய பிரதமர் நாஜீப் ராஸாக்கிடம் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது தன்சானியாவிற்கு விஜயம் செய்துள்ள இரு நாட்டு ஜனாதிபதிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
 
இரு தரப்பு விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மலேஷிய பிரதமருக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
 
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நியாயமான மதிப்பீடுகள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 
 

No comments:

Post a Comment