Sunday, June 30, 2013

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்விற்கு முன்னதாக 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படும்: ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல!

Sunday, June 30, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்விற்கு முன்னதாக 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்விற்கு முன்னர் திருத்தச் சட்டம் அமுல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் ஜூலை 9ம் திகதி பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகள் ஆரம்பமாகும் என குறிப்பிட்டுள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளதாகவும், ஏனைய கட்சி உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 

No comments:

Post a Comment