Friday, June 21, 2013

பிரிட்டன், கார்டிப் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் புலி ஆதரவு காடையர்கள் போராட்டம்: 8 புலி ஆதரவு காடையர்கள் கைது!

Friday, June 21, 2013
லண்டன்::பிரிட்டன், கார்டிப் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் புலி ஆதரவு காடையர்கள்  போராட்டம்: 8 புலி ஆதரவு காடையர்கள்  கைது!!
 
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று   புலம்பெயர் புலி ஆதரவு காடையர்  களால் நேற்று நடத்தப்பட்டுள்ளது.
 
இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன...
 
இந்தியா-இலங்கை அணிகள் மோதிய சாம்பியன் கிண்ண தொடரின் 2ஆவது அரையிறுதி போட்டியின் போது புலிக் கொடிகளை ஏந்திய புலி ஆதரவு காடையர்கள்  இருவர் மைதானத்துக்குள் ஓடினர். 
 
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் புலி ஆதரவு காடையர்களால் நடத்தப்பட்டது.

அதேவேளை புலிக்கொடிகளை ஏந்திய புலி ஆதரவு காடையர்கள்  ஆட்டம் நடந்த மைதானத்தில் இரு தடவைகள் நுழைந்தும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர்  புலி ஆதரவு அமைப்புக்கள் மைதானத்துக்கு வெளியே ஏற்பாடு செய்திருந்தன.

இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றவாளிகள் என்று கூறும் கோஷங்களையும் புலி ஆதரவு அமைப்புக்கள்  எழுப்பினார்கள்.

இலங்கையில் இந்த வருட இறுதியில் நடக்கவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டை சர்வதேச நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் புலி ஆதரவு  போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.

இதற்கிடையே ஆட்டம் நடந்த மைதானத்திலும் இருதடவைகள் புலி ஆதரவு காடையர்கள்   புலிக்கொடியை ஏந்தியவாறு கோசங்களை இட்டுக்கொண்டு மைதானத்துக்குள் ஓடினார்கள்.

இலங்கையில் கொமன்வெல்த் பிரஜைகள் 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று எழுதப்பட்ட பதாதைகளையும் அவர்கள் தம்வசம் வைத்திருந்தார்கள்.

இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது ஒரு தடவையும் இந்திய அணியின் துடுப்பாட்டத்தின் போதும் மைதானத்துக்குள் புலிக்கொடியுடன் நுழைந்து ஓடினார்கள். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, அங்கிருந்து அகற்றினார்கள்.

மைதானத்தில் நுழைந்து போராட்டம் நடத்திய புலி ஆதரவு   காடையர்கள் 8 பேரை தாம் கைது செய்துள்ளதாக வேல்ஸ் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
 
இரு புலி ஆதரவு காடையர்கள்  கைது.

No comments:

Post a Comment