Saturday, June 08, 2013
இலங்கை::புலிகள் அமைப்புக்கு இலங்கையில் உள்ள இரண்டு வங்கிகளில் 86 மில்லியன் பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது என திவயின கூறியுள்ளது.
இலங்கையில் உள்ள பிரபல வெளிநாட்டு வங்கி ஒன்றில் மாத்திரம் 56 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. புலிகள் அமைப்புக்கு இந்த பணத்தை வைப்புச் செய்த ரெஜி என்ற புலிகளின் செயற்பாட்டாளர் பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
அவரை கைதுசெய்வதற்காக சர்வதேச காவற்துறையினரால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் புலிகளின் வங்கி கணக்கில் இருந்த பணம் அரசுடமையக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment