Tuesday, June 04, 2013
இலங்கை::சீனா பிரஜை ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை::சீனா பிரஜை ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாங்கொக் நோக்கிச் செல்லவிருந்த நிலையில் கடந்த வாரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து 72 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்தப் பணம் தொடர்பில் அவர் சரியான தகவல்களை வழங்காமை காரணமாகவே அவர் தடுத்து வைக்கப்பட்டு விசராணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என தெரிவித்துள்ள சுங்கத் திணைக்களத்தின் பொலிஸ் ஊடகப் பிரிவு, இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து அவரிடமிருந்த பணம் அரசுடமையாக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார் எனக் கூறியுள்ளது.
No comments:
Post a Comment