Friday, May 31, 2013

இலங்கை வீரர்கள் பங்கேற்பதால் ஆசிய தடகளப் போட்டிக்கு தடை : சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றம்!

asianathletics-300Friday, May 31, 2013
சென்னை::இலங்கை வீரர்கள் பங்கேற்கும் நிலையில் ஆசிய தடகளப் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து இதன் போட்டிகள் புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
ஆசிய தடகளப் போட்டி ஜூலை மாதம் சென்னையில் நடத்தப்படும் என்று ஆசிய தடகள சம்மேளனம் அறிவித்திருந்தது. ஆனால் இந்தப் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெறும்போது இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலிலிதா வலியுறுத்தினார்.
 
ஆனால் இதனை ஏற்க ஆசிய தடகள சம்மேளனம் மறுத்துவிட்டதைத் தொடர்ந்து, தடகளப் போட்டி சென்னையில் நடத்துவதற்கு அனுமதிக்க தமிழக அரசு மறுத்துவிட்டது.
 
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் சென்னைக்கு பதிலாக புனேவில் ஆசிய தடகளப் போட்டி நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment