Thursday, May 16, 2013
இலங்கை::மனித உரிமை என்ற போர்வையில் நாட்டை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி: கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம!
இலங்கை::மனித உரிமை என்ற போர்வையில் நாட்டை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி: கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம!
மனித உரிமை என்ற போர்வையில் நாட்டை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி:எடுத்து வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்யும் போது பல்வேறு சவால்களை எதிர்நோக்க நேரிடும். எனினும் மனித உரிமை என்ற லேபிளைப் பயன்படுத்தி நாட்டின் அபிவிருத்திக்கு தடை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது.இவ்வாறான சதித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதானது உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களை இழிவுபடுத்தும் வகையில் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment