Tuesday, April 30, 2013

கைப்பற்றப்பட்ட காணிகளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: ஜனக்க பண்டார!

Tuesday, April 30, 2013
இலங்கை::அரசியல் இலாபங்களுக்காக வடக்கிலுள்ள காணிகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
 
கலேவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
 
வடக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட 12,000 ஏக்கர் காணிகளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள 5000 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்துடன் கலந்தாலோசித்து மீண்டும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. இந்த காணிகள் தொடர்பில் அமைச்சு நியாயமற்ற முறையில் செயற்படாது. யாரேனும் குற்றம் சுமத்துவார்களாயின் அதனை உறுதி செய்யுமாறு சவால் விடுக்கிறேன்,' என்றார் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன்.தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment