Monday, April 29, 2013

வலி வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக (புலி)கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது!

Monday, April 29, 2013
இலங்கை::வலி வடக்கில்  காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக (புலி)கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது!
 
வலி வடக்கில் மேற்க்கொள்ளப்பட்ட காணி சுவிகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று திங்கட்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வலி வடக்கிலிருந்து இருந்து இடம்பெயர்ந்து சென்றுள்ள மக்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினாகளான மாவை சேனாதிராசாஇ எஸ்.ஸ்ரீதரன்இ எம்.ஏ.சுமந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் ஆனந்த சங்கரிஇ தமிழ் மக்கள் தேசிய முன்னனியை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் உட்பட எனப் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சுன்னாகம் மதவடியில் இருந்து ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பிரதேச செயலகம் வரையான பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment