Monday, April 29, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Monday, April 29, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்
 
அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் முடங்கியமைக்கு அரசாங்கமே பொறுப்பு என்ற கூட்டமைப்பின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாராளுமன்ற முறைமையின் ஊடாக தீர்வு காண வேண்டும் என கோருவதாகவும், இது தொடர்பில் கூட்டமைப்பு அஞ்ச வேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 

No comments:

Post a Comment