Tuesday, April 30, 2013

வட மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் முதன்மை வேட்பாளராக, ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நிறுத்தப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது!

Tuesday, April 30, 2013
இலங்கை::வட மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் முதன்மை வேட்பாளராக, ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவே நிறுத்தப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ்  செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மாகாணத்தில் வெற்றி பெறுவதற்கு டக்ளஸ் தேவானந்தா நல்லதொரு வாய்ப்பைக் கொண்டுள்ளதால், அவரையே முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழு உத்தேசித்துள்ளதாக கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறியுள்ளன.

டக்ளஸ் தேவானந்தாவை முதல்வர் பதவிக்கு நிறுத்துவதை, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான மத்திய குழுக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்றும், அரசாங்கத் தரப்புக்கு டக்ளஸ் தேவானந்தாவை முன்னிறுத்துவதற்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment