Tuesday, April 30, 2013

சமூக நல்லிணக்க நோக்கம் கருதி, இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகளில் தலையிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்: அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது!

Tuesday, April 30, 2013
இலங்கை::சமூக நல்லிணக்க நோக்கம் கருதி, இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகளில் தலையிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில், “சமூக ஒருமைப்பாடும் இலங்கையின் தேசிய கொள்கையும் என்ற தலைப்பில் நேற்று ஆரம்பமான விவாதத்தில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
பிற நாடுகளில் உள்விவகாரங்களில் இலங்கை தலையிடுவதில்லை.
அவர்களின் இறையாண்மையை இலங்கை மதிக்கின்றது.
இந்த நிலையில், இலங்கையும் இதே பரஸ்பர எதிர்ப்பார்ப்பை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
 
 

No comments:

Post a Comment