Monday, April 29, 2013

அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக பரவுகிறது: இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே.சிசன்!

Monday, April 29, 2013
இலங்கை::எனது நாடான அமெரிக்காவில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அங்கு முஸ்லிம்கள் அனைத்து உரிமைகளுடனும் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். அது மாத்திரமன்றி எமது நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற மார்க்கமாக இஸ்லாம் மார்க்கம் தான் உள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே.சிசன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை ஜமாலியா கிராமத்துக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
திருகோணமலைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே.சிசன் நேற்று  குறித்த ஜமாலியா கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
 
திருகோணமலை வை.எம்.எம்.ஏ கிளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு பிரதேசத்தின் நிலமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு ம் பதிலளித்தார். இதன் போதே அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக பரவி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் போது ஜமாலியா முஸ்லிம் மஹா வித்தியாலய நூலகத்திற்கு நூல் அன்பளிப்பு பொதியினை பாடசாலையின் உதவி அதிபர் ஜனாப் பரீடிடம் தூதுவர் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவராலயத்தின் அதிகாரிகள், ஜமாலியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் மஹ்ரூப், ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் அல்ஹாஜ் முஸ்தபா, திருகோணமலை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் வலீத், பிரதேச முஸ்லிம் விவாகப் பதிவாளர் அல்ஹாஜ் சிஹார்தீன் மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment