Tuesday, April 30, 2013

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து விசாரணை!:-யுத்தம் நிறைவடைந்தத்தின் பின்னர் சகல இனங்கள் மற்றும் மதங்களிடையே ஒன்றுமை: மிசேல் ஜே சிசோன்!

Tuesday, April 30, 2013
இலங்கை::தூதுவர்களுக்காக ஒழுக்க நெறிகளை மீறி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் சீசோன், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் அமைப்புகளின் 25 பிரதிநிதிகளை கொழும்பு அழைத்து ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம் குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 
 
இந்த முஸ்லிம் பிரதிநிதிகளை, அமெரிக்க தூதுவர் சந்திக்கவிருந்தமை தொடர்பான தகவல்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் கிடைத்திருக்கவில்லை. முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்திய, தூதுவர்  கிழக்கில் முஸ்லிம்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்துள்ளார். 
 
அமெரிக்க தூதுவர் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இடையிலான நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தை மூலம் தூதுவர், வெளிநாட்டு தூதுவர்கள் தொடர்பான 1961 ஆம் ஆண்டு வியன்னா இணக்கப்பாட்டை மீறியுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. 
 
இதற்கு முன்னர், அமெரிக்க தூதரகம், மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமை குறித்து அரசாங்கத்திடம் கருத்துக்களை கேட்டிருந்தது. 
 
யுத்தம் நிறைவடைந்தத்தின் பின்னர் சகல இனங்கள் மற்றும் மதங்களிடையே ஒன்றுமை: மிசேல் ஜே சிசோன்!
 
யுத்தம் நிறைவடைந்தத்தின் பின்னர் சகல இனங்கள் மற்றும் மதங்களிடையே ஒன்றுமை மற்றும் சமத்துவம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிசேல் ஜே சிசோன் தெரிவித்துள்ளார்.
 
மட்டக்களப்பு – புல்லுமலை பிரதேசத்தில், மக்கள் மீள்குடியமர்ந்த பின்னர், 3 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர் பொறுமதியான 10 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனை பார்வையிடும் நோக்கில் நேற்று மட்டக்களப்புக்கு சென்ற மிசேல் ஜே சிசோன், இவ்வாறு குறிப்பிட்டார்.
 
யுத்தத்தின் பின்னர், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தாம் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
யுத்தத்தின் பின்னர், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தாம் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 

No comments:

Post a Comment