Tuesday, April 30, 2013

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதை தடுக்க செனல் 4 தொலைக்காட்சி மற்றும் பி.பி.சியின் முன்னாள் செய்தியாளர் பிரான்சஸ் ஹெரிசன் ஆகியோருடன் கனடா மேற்கொண்ட திட்டம் வெளியாகியுள்ளது: திவயின!

Tuesday, April 30, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதை தடுக்க பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி மற்றும் இலங்கையில் பணியாற்றிய பி.பி.சியின் முன்னாள் செய்தியாளர் பிரான்சஸ் ஹெரிசன் ஆகியோருடன் கனடா மேற்கொண்ட திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
 
லண்டனில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களின் கூட்டத்தில், மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என கனடா முன்வைத்த யோசனைக்கு, சியாரலியோன் மற்றும் ட்ரனிட்டா ஆகிய நாடுகள் மாத்திரமே ஆதரவு தெரிவித்தன.
 
எனினும் செனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே மற்றும் ஹெரிசன் ஆகியோர் பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றி, மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டாம் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.
 
இதனிடையே இலங்கையில் நடைபெறும் பொநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேயார்ட் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment