Tuesday, March 5, 2013

நாட்டின் உத்தியோகபூர்வமற்ற காவல்துறையினர் தமது அமைப்பே என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது!

Tuesday, March 05, 2013
இலங்கை::நாட்டின் உத்தியோகபூர்வமற்ற காவல்துறையினர் தமது அமைப்பே என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாடி வீடொன்றில் தேரர் ஒருவரின் பெயரை உபயோகித்து மோசடியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்து பொதுபல சேனா அமைப்பினர் காவல்துறையினரிடம் ஒப்படைந்தனர்.

இதனையடுத்தே, பொதுபல சேனா அமைப்பு இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளது.

பொறுப்பு வாய்ந்தவர்கள் இதனை செய்யாவிட்டால் எங்களைப் போன்ற சமூக உணர்வுள்ளவர்கள் செய்ய வேண்டியது அவசியம்.

அதற்காக சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது.

சட்டம் இல்லாவிட்டால், சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

இதற்கு பின்னர் பொதுபல சேனா அமைப்பு நாட்டில் உத்தியோகபூர்வமற்ற காவல்துறை அமைப்பாகும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment