Saturday, February 2, 2013

ஹெலிகாப்டரில் இந்திய கடற்படை வீரர்கள் ராமேஸ்வரத்தில் கடத்தல் தடுப்பு பயிற்சி : "திடீர்' பயிற்சியால் மிரண்ட மீனவர்கள்!

Saturday, February 02, 2013
ராமேஸ்வரம்::ராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து, மீன்பிடி படகில் குதித்து, கடத்தல் தடுப்பு பயிற்சியில் ஈடுபட்டனர். இலங்கையில் உள்நாட்டுபோர் தீவிரமாக இருந்தபோது, ராமேஸ்வரத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள இலங்கைக்கு வெடி மருந்து, எரிப்பொருட்கள் கடத்தப்பட்டன. தற்போது, இலங்கையில் அமைதி திரும்பினாலும், இன்னும் போதைப்பொருட்கள், கடல் அட்டை கடத்தல் தொடர்கிறது.

நடுக்கடலில் படகில் கடத்தல் பொருள் சென்றால், எப்படி தடுப்பது என்பது குறித்து, நேற்று இந்திய கடற்படை வீரர்கள், ராமேஸ்வரத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். உச்சிப்புளி பருந்து விமான தளத்தில் இருந்து புறப்பட்ட கடற்படை ஹெலிகாப்டர், ராமேஸ்வரம் கடற்கரையிலும், கடற்கரையில் நிறுத்தப்பட்ட மீன்பிடி படகுகள் மீதும் மிக தாழ்வாக பறந்தது. இதில் இருந்து கடற்படை வீரர்கள்

கயிறு மூலம் இறங்கி பயிற்சி மேற்கொண்டனர். திடீரென படகுகள் மீது ஹெலிகாப்டர், தாழ்வாக பறந்ததை கண்டு, மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். "வழக்கமாக மேற்கொள்ளும், பாதுகாப்பு ஒத்திகை தான் இது' என, கடற்படையினர் கூறியதால், மீனவர்கள் நிம்மதி அடைந்தனர்.

No comments:

Post a Comment