Friday, February 15, 2013

இலங்கையில் வெற்றிகரமான முறையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடாத்த பூரண ஆதரவளிக்கப்படும் -பங்களாதேஷ் அறிவித்தள்ளது!

Friday, February 15, 2013
இலங்கை::இலங்கையில் வெற்றிகரமான முறையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடாத்த பூரண ஆதரவளிக்கப்படும் என பங்களாதேஷ் அறிவித்தள்ளது.இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தற்போது பங்களாதேஷிற்கு விஜயம் செய்துள்ளார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது.இந்த மாநாடு தொடர்பில் அமைச்சர் பீரிஸ், பங்களாதேஷ் பிரதருக்கு விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment