Wednesday, January 30, 2013

யுத்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது!

Wednesday, January 30, 2013
இலங்கை::யுத்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது.இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினரின் நடவடிக்கைகள் குறித்து இராணுவ நீதிமன்றம் தொடர்ந்தும் விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.இந்த விசாரணைகள் விரைவில் பூர்த்தியாகும் என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சில விசாரணைகள் நடத்தப்பட்டு அந்த அறிக்கை பாதுகாப்புச் செயலாளரிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும், இராணுவ நீதிமன்றின் யுத்தம் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினரின் நடவடிக்கைகள் குறித்து சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment