Wednesday, January 30, 2013

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான புதுக்குடியிருப்பு வீட்டை அண்டிய பிரதேசத்தில் 51, 000 நிலக்கண்ணி வெடிகள்!

Wednesday, January 30, 2013
இலங்கை::புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான புதுக்குடியிருப்பு வீட்டை அண்டிய பிரதேசத்தில் 51, 000 நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக தாஸ் நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் முகாமையாளர் மேஜர் சுனில் ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்திலிருந்து நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் நாளொன்றுக்கு 90 கண்ணி வெடிகளை அகற்றி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலிய உதவிகளுடன் தாஸ் நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் பணியாற்றி வருகின்றது.

மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக சகல நிலக்கண்ணி வெடிகளையும் அகற்ற முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment