Tuesday, January 29, 2013

இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 21 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்!

Tuesday, January 29, 2013
சென்னை::(இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 21 பேரும் எதிர்வரும் இரண்டு வாரங்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என கடற்றொழில் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் அண்மையில் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது அவர்களது நான்கு படகுகளும் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் தமிழகத்திலுள்ள சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment