Thursday, December 6, 2012

ஸ்கொட்லாந்தில் சட்டவிரோதமான முறையில் தொழில் புரிந்த இலங்கையர்கள் சிலர் கைது!

Thursday, December 06, 2012
ஸ்கொட்லாந்தில் சட்டவிரோதமான முறையில் தொழில் புரிந்த இலங்கையர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை ஸ்கொட்லாந்தின் பீடர்ஹெட் மற்றும் சிலோத் நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை, பிலிபின்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை நாடுகடத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று, தேடுதலை நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment