Sunday, December 02, 2012
இலங்கை::கண்டவர்களும் அடித்துவிட்டு போகும் காற் பந்து போல அமைந்துள்ளது எனது நிலை

பதில் : என்னைப்பற்றி வெளிவந்த கட்டுரைகளில் அப்படி எழுதியது எனக்குத் தெரியும். நான் ஆயுதப் போராட்டத்திற்குள் பிரபாகரன் மூலமே வந்தேன். ரெலோ மூலம் அல்ல.
கேள்வி : அது எப்படி நடந்தது? பதில் : நான் இளைஞனாக இருந்தபோது எனது சொந்த ஊரான மயிலிட்டியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் சேர்ந்து இயங்கினேன். மயிலிட்டி காங்கேசன்துறை தொகுதியை சேர்ந்தது, எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் பின் அமிர்தலிங்கம் காங்கேசன்துறை எம்.பி. ஆகினார். நான் ஆயுதப்போராட்டம் மூலமே தமிழ் ஈழத்தை அடையலாம் என அவருடன் விவாதிப்பேன். ஒருநாள் அமிர்தலிங்கம் எனக்கு பிரபாகரனை அறிமுகம் செய்துவைத்தார். நாம் இருவரும் ஒரேவிதமாக சிந்திப்பதால் நாமிருவரும் பேசிக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார். பின்னர் ஒருநாள் நான் பிரபாகரனுடன் மாவை சேனாதிராஜாவின் வீட்டில் நீண்டநேரம் உரையாடினேன். மாவை சேனாதிராஜா இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யாக உள்ளார். அதன் பின் நான் தமிbழ விடுதலைப் புலி இயக்கத்தில் உதவியாளராகச் சேர்ந்து பின்னர் அங்கத்தவரானேன். கேள்வி : அப்படியானால் உங்களை ஏன் ரெலோவுடன் இணைத்து பேசுகின்றார்கள்? பதில் : புலிகளில் 1980இல் பிரிவு ஏற்பட்டது. உமாமகேஸ்வரன் புளொட் இயக்கத்தை தொடக்கினார். பிரபாகரனுடன் தொடர்ந்தும் இருந்த நாங்கள், தங்கத்துரையின் தலைமையிலிருந்த ரெலோவுடன் கூட்டுச் சேர்ந்தோம். எனக்கு தங்கத்துரை மீது பிடிப்பு ஏற்பட்டது. அவரோடு நான் நெருங்கிப் பழகினேன். இது தான் மக்கள் நான் ரெலோவில் இருந்தேன் என நினைக்கக் காரணம். நான் எப்போதும் தமிbழ விடுதலைப்புலிகளுடன்தான் இருந்தேன். கேள்வி : நீங்கள் புலி இயக்கத்தில் சேர்ந்தபோது எவ்வாறு அழைக்கப்பட்டீர்கள்? பதில் : மயிலிட்டியில் எனது செல்லப் பெயர் குட்டி. அப்பெயரிலேயே என்னை இயக்கத்திலும் அழைத்தனர். நான் இந்தியாவிலிருந்தபோது சில இடங்களில் குமரன் எனும் புனைபெயரை பயன்படுத்தினேன். ஆனால், வெகுவிரைவிலேயே நான் கே.பி ஆகிவிட்டேன். கேள்வி : தமிbழ விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர் என்ற நிலையிலிருந்த நீங்கள், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் சமூக சேவையில் ஈடுபடும் ஒருவராக முகிழ்ந்துள்Zர்கள். இது ஒரு வகையில் பிராயச்சித்தம் நோக்கிய உங்களது பிரத்தியேக பயணமாகும். இந்த முகிழ்ப்பு உண்மையில் பாராட்டுக்குரியது. ஆனால், புலிதன் வரிகளை அல்லது சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றும் என நம்பாத ஆட்கள் பலர் உள்ளனர்.
உங்களைப் பற்றி ஊடகங்களில் பல செய்திகள் வருவது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஈடுபடுவதாக கூறப்படும் செயற்பாடுகள் பற்றி சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. உங்களுக்கு தமிழ் புலம்பெயர்ந்தோர்களில் சில பிரிவினருடன் உள்ள உறவுகளை வைத்துகொண்டு புலி சார்பு ஊடகங்களிலும் புலிகளின் ஊடகங்களிலும் உங்களை கேவலமாக சித்தரிக்கின்றனர்.
நீங்கள் விரைவில் அரசியலில் மும்முரமாக ஈடுபடப்போவதாக யாழ்ப்பாண பத்திரிகைகள் ஊகம் வெளியிடுகின்றன. நீங்கள் அமைத்து நிர்வகிக்கும் தொண்டு நிறுவனமாக நேர்டோவும் உள்ளது. நீங்கள் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு போயிருக்கிaர்கள். இவை சிலரால் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படுகின்றன. இந்த குற்றசாட்டுக்கள், விமர்சனங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? இவற்றுக்கு நீங்கள் பதிலளிக்க விரும்புகின்aர்களா அல்லது உதாசீனம் செய்யப் போகின்aர்களா?
பதில் : இந்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் பற்றி நான் அறிவேன்.
ஊடகங்களும் சில எதிரணி அரசியல் வாதிகளும் இதில் ஈடுபடுகின்றனர். அவற்றுள் அநேகமானவை உண்மையல்ல. இவை பெறுமதியற்றவை, அடிப்படை அற்றவை. கண்டவர்களும் அடித்து விட்டுப்போகும் கால்பந்து போல நான் உள்ளேன். இந்த அரசாங்கத்தையும் பாதுகாப்புச் செயலாளரையும் விமர்சிக்க விரும்பு வர்களுக்கு நான் ஒரு கருவியாகிவிட்டேன். நீங்கள் கூறியதுபோல எனது மாற்றம் உண்மையானதும் நேர்மையானதும் ஆகும். ஆனால், சமூகத்தில் உள்ள பலரால் இதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஏன் விளங்கிக்கொள்ளவோ முடியாது. பல தசாப்தங்களாக வன்முறை மற்றும் அழிவு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு பின் நான் அதையிட்டு வருந்துகின்றேன்.
மனித இனத்துக்கான சேவை மூலம் நான் நிம்மதி தேட விழைகின்றேன். இந்த அரசாங்கமும் பாதுகாப்புச் செயலாளரும் இவ்வாறான அதிசிறந்த வாய்ப்பைத் தந்துள்ளனர். இதற்காக நான் அவர்களுக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன். நான் உண்மையில் பாக்கியம் செய்தவன். இந்தக் கருணைக்கும் ஒரு புதிய வாழ்வுக்கான வாய்ப்புக்கும் நான் கடவுளுக்கு நன்றி கூறுகின்றேன்.
எனக்கு மறைக்கவேண்டியது என எதுவுமில்லை. நேர்டோ முன்னெடுத்துள்ள பல்வேறு சேவைகளுக்கும் உதவும் மக்களை நான் எதிர்ப்பார்த்து உள்ளேன். என்னால் நேர்மையான சந்தேகங்களை தெளிவுபடுத்தி உண்மையான நிலவரத்தை பலரும் அறியச்செய்ய முடியுமாயின் எனது எதிர்ப்பார்ப்பு நிறைவேறும் என நான் மனதார நம்புகின்றேன்.
கேள்வி : புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக இலங்கையில் ஐ.நா.வின் வகிபாகம் குறித்து ஐ.நா. தொகுத்த ஓர் உள்ளக அறிக்கைபற்றி அண்மைக்கால ஊடக வெளிப்படுத்தல்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. நான் 2010இல் உங்களை பேட்டி கண்டபோது, இது தொடர்பாக நீங்கள் பல கருத்துக்களைத் தெரிவித்தீர்கள். இந்த விடயத்தில் ஊடகங்களின் முக்கிய கவனம் குவிக்கப்பட்டுள்ள பின்னணியில், சில விடயங்களை தெளிவுபடுத்துவதற்காக, நான் மீண்டும் அதில் என் கவனத்தை செலுத்த எண்ணுகின்றேன். நாங்கள் மீண்டும் அந்த பழைய நிகழ்வுகளை மீட்டுப்பார்ப்போமா?
பதில் : ஆம், இந்த விடயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டப்படுவதை நானும் அவதானிக் கின்றேன். பழைய விடயங்கள் மீண்டும் தோண்டப்படுகின்றன. வழமைபோலவே சில உண்மைகள் சுயலாப நோக்கில் திரித்துக் கூறப்படுகின்றன அல்லது நசுக்கப்படுகின்றன. உண்மையில் சில அம்சங்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக இதில் எனக்குத் தெரிந்த யாவற்றையும் பற்றி நான் பேசத் தயாராக உள்ளேன்.
கேள்வி: சில வாரங்களின் முன்தான் நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இது தொடர்பாக பீ.பீ.ஸி செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்திருந்தார். ஐ.நாவின் உதவி யுடன் யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவர நோர்வே எவ்வாறு முயன்று கொண்டிருந்தது எனவும், இதற்காக உங்களை ஒஸ்லோவுக்கு கொண்டுவர அது எவ்வாறு முயன்று கொண்டிருந்தது எனவும் அவர் விசேடமாகக் குறிப்பிட்டிருந்தார்.
புலிகளின் தலைவர் உங்களை அவ்வாறு செய்ய விடாது தடுத்தார். இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்தியதற் காக சொல்ஹெய்ம், வெளிநாட்டு தமிழ் ஊடகங்களின் ஒரு பகுதி யினரால் கடுமையாக விமர்சிக்கப் பட்டுள்ளார். நாடு கடந்த தமிbழ அரசாங்கத்தின் பிரதமர் எனப்படும் விசுவநாதன் உருத்திரகுமாரன், சொல்ஹெய்மின் கூற்றுகளை வெளிப்படையாக மறுத்துள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து யாது?
பதில்: எரிக் கூறியது 100 சதவீதம் உண்மை. அவ்வாறான முயற்சிகள் நடந்தன. அவை ப் புலிகளின் தலைமையினால் தடுக் கப்பட்டன. இந்த மாதிரியான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக் கப்பட அனுமதிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு இரத்தம் சிந்தப்படாமல் தடுத்திருக்கலாம். எல்.ரி.ரி.ஈ. தலை வர்களில் பலர் இன்றும் உயிரோடு இருந்திருப்பர்.
கேள்வி: அவ்வாறாயின் அந்த நேரத்தில் அவ்வாறான முயற்சிகள் நடக்கவில்லையென உருத்திர குமாரன் ஏன் கூறவேண்டும்?
பதில்: உருத்திரகுமாரன் 2009 பெப்ரவரியில் நடந்ததைப்பற்றியே கூறுகின்றார். அவர் வேண்டுமென்றே பெப்ரவரியின் பின் நடந்தவற்றை தெரியாதவர் போல நடிக்கின்றார்.
கேள்வி: 2009 ஜனவரியில் புலிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட சர்வதேச உறவுகள் என்ற புதிய பகுதிக்கு நீங்கள் தலைவராக நியமிக்கப்பட்டீர்கள் என்பது பிரசித்தமானது. உங்களிடம் ஒரு யுத்த நிறுத்தத்தைக் கொண்டுவரும் பொறுப்பும் தரப் பட்டது. இதன் பின் என்ன நடந்தது என விபரமாகக் கூறுவீர்களா?
பதில்: ஆம் நிச்சயமாக. தமிbழ விடுதலைப் புலிகளின் முடிவு நெருங்கிவிட்டது என்பது 2008லேயே நிலைமையை அவதானித்தவர்களுக்கு விளங்கி விட்டது. இராணுவம் மெதுவாக ஆனால், உறுதியாக முன்னேறிக் கொண்டிருந்தது. தமிbழ விடுதலைப் புலிகள் வாயடித்தபோதும் பின்வாங்கிக் கொண்டிருந்தனர். ஏ-9 பிரதான வீதியின் மேற்கிலிருந்த பிரதேசங்களிலேயே அப்போது பெருமளவுக்கு மோதல்கள் இடம் பெற்று வந்தன.
இந்தப் பகுதிக்குள் இராணுவத்தின் பெரும்பகுதி குவிக்கப்படுவதற்கு முன் ஒரு கெளரவமான யுத்த நிறுத்தத்தை கொண்டுவருவது சாத்தியமானதாக இருந்தது. ஆனால், எல்.ரி.ரி.ஈ. தலைமையாலும் அதன் வெளிநாட்டு அமைப்புகளாலும் இதை விளங்கிக்கொள்ள முடிய வில்லை. புலிகளின் தலைமை மீண்டும் என் னோடு தொடர்புகளை ஏற்படுத்தி யது. 2008 இன் பிற்பகுதியில்தான் மக்களினதும் தமிbழ விடுதலைப் புலிகளின் தலைவர்களினதும் போராளிகளினதும் உயிர்களைக் காப்பாற்ற ஒரு யுத்த நிறுத்தத்தின் அவசியத்தை நான் வலியுறுத்திய போது தமிbழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் போராளிகள் சம்மதித்தது போல தெரிந்தது. ஆயினும், பிரபாகரன் விடயங்களை இழுத்தடித்தார்.
இறுதியாக 2008 முடிவில், ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டுவரும் பணியாணையுடன் என்னை புலிகள் இயக்கத்தின் சர்வதேச உறவுகள் பகுதிக்குப் பொறுப்பாக நியமிக்க பிரபாகரன் சம்மதித்தார். டிசெம்பர் 2008 லேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டபோதும் யுத்த நிறுத்தம் கொண்டுவரும் விடயத்தில் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் இழுத்தடித்தே வந்தது. பரந்தன், கிளிநொச்சி, மற்றும் ஆனையிறவு ஆகியவற்றின் ஒன்றன் பின் ஒன்றான வீழ்ச்சியோடு புதிய வருடம் பிறக்க இராணுவம் கணிசமான முற்பாய்ச்சல்களை மேற்கொண்டது.
இப்போதுதான் தலைமை விழித்துக்கொண்டது. என்னை ஒழுங்கான முறையில் நியமனம் செய்தது. ஆனால், வெளிநாட்டு விடயங்களுக்கு பொறுப்பாக இருந்த காஸ்ட்ரோ (வீரகத்தி மணிவண்ணன்) தனது பிரதிநிதியான நெடியவன் (பேரின்பநாயகம் சிவபரன்) என்ப வரின் மூலம் எனது பணிகளைக் குழப்பி வந்தார்.
எனக்குப் போதிய நிதி வளங்கள் தரப்படவில்லை. இப்படியிருந்த போதும் ஒரு யுத்த நிறுத்தத்தைக் கொண்டுவர நான் என்னாலான சகலவற்றையும் செய்தேன்.
கேள்வி: இதை நீங்கள் எவ்வாறு செய்தீர்கள்? நீங்கள் அவர்களுடன் நேரில் தொடர்புகொண்டீர்களா?
பதில்: நான் ஏராளமான கடிதங்கள், தொலைநகல்கள், மின்னஞ்சல்கள் அனுப்பினேன். இயன்ற வேளையில் அவர்களுடன் நேரில் தொடர் கொள்ளப்பட்டது. வேறு பல சந்தர்ப்பங்களில் நான் எனது பிரதிநிதிகளை அனுப்பினேன். முக்கிய ஆட்களுடன் நல்ல உறவு உள்ளவர்களை வேண்டுகோள் களை செய்ய பயன்படுத்தினேன்.
கேள்வி: இதில் நோர்வேயின் வகிபாகம் எவ்வாறு இருந்தது?
பதில்: யுத்த நிறுத்தம் மற்றும் சமாதான செயற்பாடு என்பவற்றுக்கு சான்றுறுதிப்படுத்திய அனுசரணையாளராக ஒஸ்லோ இருந்தது. யுத்தம் முழு அளவில் தொடங்கிய பின் நோர்வே எந்த அர்த்தமுள்ள பாத்திரத்தை வகிக்காதபோதும் அது இலங்கைபற்றி தொடர்ந்தும் விசனம் கொண்டிருந்தது.
கேள்வி: அப்படியாயின் ஒஸ்லோ என்ன செய்தது?
பதில்: சொல்ஹெய்ம் என்னோடு தொடர்பில் இருந்தார். ஒரு யுத்த நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்கான வழிவகைகளை ஆராயவென அமைதியான ஒரு கூட்டத்தை நடத்த நாம் தீர்மானித்தோம். 2008 பெப்ரவரி இறுதி வாரத்தில் இரகசியக் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டது.
கேள்வி: இந்தக் கூட்டம் எங்கே நடந்தது?
பதில்: அது மலேஷியாவின் தலைநகரான கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் நடந்தது. அது இரண்டு நாட்களாக நடந்தது.
கேள்வி: யார் யாரெல்லாம் பங்குபற்றினார்கள்? எரிக் சொல்ஹெய்ம் வந்தாரா?
பதில்: இல்லை. நோர்வே அமைச்சர் என்ற உயர் நிலையில் அவர் இருந்ததால் அவர் இதற்கு வருவது முறையாக இருக்கவில்லை. அவர் ஒரு முக்கிய நோர்வே அதிகாரியை தனது பிரதிநிதியாக அனுப்பியிருந்தார். இந்தக் கூட்டத்தில் வேறு இரண்டு நோர்வே அதிகாரிகளும் இலங்கைக்கான நோர்வேத் தூதுவரும் கலந்துகொண்டனர்.
கேள்வி: அவர் யார்?
பதில்: அப்போது கொழும்பிலிரு ந்த நோர்வே தூதுவர் ரோ ஹற்றெம் ஆவார். அவர் இப்போது ஆப்கானிஸ்தானில் இருக்கின்றார் என நான் நம்புகிறேன்.
கேள்வி: புலிகள் இயக்கத்தை பிரதிநிதித்துவம் செய்தவர் யார்? பதில்: நான், எனது செயலாளரும் உதவியாளருமான அப்பு என
அழைக்கப்படும் ஜோய் மகேஷ்வரன் மற்றும் உருத்திரகுமாரன் ஆகியோர்.
கேள்வி: இந்தப் பேச்சுகளின் போது என்ன நடந்தது?
பதில்: புலிகள் எனக்கு வழங்கிய பணியாணை யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வருதல் என இருந்தபடியால், நான் அந்த கூட்டத்தில் அதை முன்னிறுத் திப் பேசினேன். பொதுமக்களின் துன்பகரமான நிலைமைபற்றி நான் அழாக்குறையாகப் பேசினேன். அவர்களின் உயிர்களைக் காப்பாற்ற ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்பாடு செய்யும்படி நான் கெஞ்சினேன்.
கேள்வி: என்ன பதில் கிடைத்தது?
பதில்: அது எதிர்பார்க்காத பதில். ஹட்ரெம், நேரடியாகவும் ஒளிவு மறைவின்றியும் பேசினார். நாம் வெளிப்படையாகப் பேசுவோமா எனத் தொடங்கிய அவர் கசப்பான ஆனால் நிதர்சனமான உண்மைகளைக் கூறினார்.
கேள்வி: அவர் என்ன கூறினார்?
பதில்: அவர் முதலில் அப்போதைய கள நிலவரம்பற்றி உண்மையான ஒரு மதிப்பீட்டை எமக்கு எடுத்துரைத்தார். இலங்கை இராணுவம், இராணுவ ரீதியில் உச்சத்தில் இருப்பதை அவர் தெளிவாகக் கூறினார்.
தமbழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை தோற்கடிக்கப்போவது நிச்சயம் என அவர்கள் தெரிந்திருந்த அந்த நிலைமையில், இலங்கைக்கு ஒரு யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய எந்தத் தேவையுமில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
கவலைப்படுகிறார் முP எனும் குமரன் பத்மநாதன்
கேள்வி : நீங்கள் ரெலோ இயக்கத்தில் இருந்தபோது குமரன் எனும் இயக்கப் பெயரை பயன்படுத்தவில்லையா?
பதில் : இல்லை. அப்படி இல்லை. முதலில் நான் ஒருபோதும் ரெலோ உறுப்பினராக இருக்கவில்லை.
கேள்வி : அப்படியா? நீங்கள் முதலில் ரெலோவில் இருந்தீர்கள் எனவும் அதன் தலைவர்களான குட்டிமணியும் தங்கத்துரையும் 1981இல் கடற்படையால் கைது செய்யப்பட்ட பின்னரே எல்.ரி.ரி.ஈ.யில் இணைந்தீர்கள் எனவும் நான் நினைத்தேன்.

பதில் : என்னைப்பற்றி வெளிவந்த கட்டுரைகளில் அப்படி எழுதியது எனக்குத் தெரியும். நான் ஆயுதப் போராட்டத்திற்குள் பிரபாகரன் மூலமே வந்தேன். ரெலோ மூலம் அல்ல.
கேள்வி : அது எப்படி நடந்தது? பதில் : நான் இளைஞனாக இருந்தபோது எனது சொந்த ஊரான மயிலிட்டியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் சேர்ந்து இயங்கினேன். மயிலிட்டி காங்கேசன்துறை தொகுதியை சேர்ந்தது, எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் பின் அமிர்தலிங்கம் காங்கேசன்துறை எம்.பி. ஆகினார். நான் ஆயுதப்போராட்டம் மூலமே தமிழ் ஈழத்தை அடையலாம் என அவருடன் விவாதிப்பேன். ஒருநாள் அமிர்தலிங்கம் எனக்கு பிரபாகரனை அறிமுகம் செய்துவைத்தார். நாம் இருவரும் ஒரேவிதமாக சிந்திப்பதால் நாமிருவரும் பேசிக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார். பின்னர் ஒருநாள் நான் பிரபாகரனுடன் மாவை சேனாதிராஜாவின் வீட்டில் நீண்டநேரம் உரையாடினேன். மாவை சேனாதிராஜா இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யாக உள்ளார். அதன் பின் நான் தமிbழ விடுதலைப் புலி இயக்கத்தில் உதவியாளராகச் சேர்ந்து பின்னர் அங்கத்தவரானேன். கேள்வி : அப்படியானால் உங்களை ஏன் ரெலோவுடன் இணைத்து பேசுகின்றார்கள்? பதில் : புலிகளில் 1980இல் பிரிவு ஏற்பட்டது. உமாமகேஸ்வரன் புளொட் இயக்கத்தை தொடக்கினார். பிரபாகரனுடன் தொடர்ந்தும் இருந்த நாங்கள், தங்கத்துரையின் தலைமையிலிருந்த ரெலோவுடன் கூட்டுச் சேர்ந்தோம். எனக்கு தங்கத்துரை மீது பிடிப்பு ஏற்பட்டது. அவரோடு நான் நெருங்கிப் பழகினேன். இது தான் மக்கள் நான் ரெலோவில் இருந்தேன் என நினைக்கக் காரணம். நான் எப்போதும் தமிbழ விடுதலைப்புலிகளுடன்தான் இருந்தேன். கேள்வி : நீங்கள் புலி இயக்கத்தில் சேர்ந்தபோது எவ்வாறு அழைக்கப்பட்டீர்கள்? பதில் : மயிலிட்டியில் எனது செல்லப் பெயர் குட்டி. அப்பெயரிலேயே என்னை இயக்கத்திலும் அழைத்தனர். நான் இந்தியாவிலிருந்தபோது சில இடங்களில் குமரன் எனும் புனைபெயரை பயன்படுத்தினேன். ஆனால், வெகுவிரைவிலேயே நான் கே.பி ஆகிவிட்டேன். கேள்வி : தமிbழ விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர் என்ற நிலையிலிருந்த நீங்கள், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் சமூக சேவையில் ஈடுபடும் ஒருவராக முகிழ்ந்துள்Zர்கள். இது ஒரு வகையில் பிராயச்சித்தம் நோக்கிய உங்களது பிரத்தியேக பயணமாகும். இந்த முகிழ்ப்பு உண்மையில் பாராட்டுக்குரியது. ஆனால், புலிதன் வரிகளை அல்லது சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றும் என நம்பாத ஆட்கள் பலர் உள்ளனர்.
உங்களைப் பற்றி ஊடகங்களில் பல செய்திகள் வருவது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஈடுபடுவதாக கூறப்படும் செயற்பாடுகள் பற்றி சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. உங்களுக்கு தமிழ் புலம்பெயர்ந்தோர்களில் சில பிரிவினருடன் உள்ள உறவுகளை வைத்துகொண்டு புலி சார்பு ஊடகங்களிலும் புலிகளின் ஊடகங்களிலும் உங்களை கேவலமாக சித்தரிக்கின்றனர்.
நீங்கள் விரைவில் அரசியலில் மும்முரமாக ஈடுபடப்போவதாக யாழ்ப்பாண பத்திரிகைகள் ஊகம் வெளியிடுகின்றன. நீங்கள் அமைத்து நிர்வகிக்கும் தொண்டு நிறுவனமாக நேர்டோவும் உள்ளது. நீங்கள் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு போயிருக்கிaர்கள். இவை சிலரால் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படுகின்றன. இந்த குற்றசாட்டுக்கள், விமர்சனங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? இவற்றுக்கு நீங்கள் பதிலளிக்க விரும்புகின்aர்களா அல்லது உதாசீனம் செய்யப் போகின்aர்களா?
பதில் : இந்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் பற்றி நான் அறிவேன்.
ஊடகங்களும் சில எதிரணி அரசியல் வாதிகளும் இதில் ஈடுபடுகின்றனர். அவற்றுள் அநேகமானவை உண்மையல்ல. இவை பெறுமதியற்றவை, அடிப்படை அற்றவை. கண்டவர்களும் அடித்து விட்டுப்போகும் கால்பந்து போல நான் உள்ளேன். இந்த அரசாங்கத்தையும் பாதுகாப்புச் செயலாளரையும் விமர்சிக்க விரும்பு வர்களுக்கு நான் ஒரு கருவியாகிவிட்டேன். நீங்கள் கூறியதுபோல எனது மாற்றம் உண்மையானதும் நேர்மையானதும் ஆகும். ஆனால், சமூகத்தில் உள்ள பலரால் இதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஏன் விளங்கிக்கொள்ளவோ முடியாது. பல தசாப்தங்களாக வன்முறை மற்றும் அழிவு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு பின் நான் அதையிட்டு வருந்துகின்றேன்.
மனித இனத்துக்கான சேவை மூலம் நான் நிம்மதி தேட விழைகின்றேன். இந்த அரசாங்கமும் பாதுகாப்புச் செயலாளரும் இவ்வாறான அதிசிறந்த வாய்ப்பைத் தந்துள்ளனர். இதற்காக நான் அவர்களுக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன். நான் உண்மையில் பாக்கியம் செய்தவன். இந்தக் கருணைக்கும் ஒரு புதிய வாழ்வுக்கான வாய்ப்புக்கும் நான் கடவுளுக்கு நன்றி கூறுகின்றேன்.
எனக்கு மறைக்கவேண்டியது என எதுவுமில்லை. நேர்டோ முன்னெடுத்துள்ள பல்வேறு சேவைகளுக்கும் உதவும் மக்களை நான் எதிர்ப்பார்த்து உள்ளேன். என்னால் நேர்மையான சந்தேகங்களை தெளிவுபடுத்தி உண்மையான நிலவரத்தை பலரும் அறியச்செய்ய முடியுமாயின் எனது எதிர்ப்பார்ப்பு நிறைவேறும் என நான் மனதார நம்புகின்றேன்.
கேள்வி : புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக இலங்கையில் ஐ.நா.வின் வகிபாகம் குறித்து ஐ.நா. தொகுத்த ஓர் உள்ளக அறிக்கைபற்றி அண்மைக்கால ஊடக வெளிப்படுத்தல்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. நான் 2010இல் உங்களை பேட்டி கண்டபோது, இது தொடர்பாக நீங்கள் பல கருத்துக்களைத் தெரிவித்தீர்கள். இந்த விடயத்தில் ஊடகங்களின் முக்கிய கவனம் குவிக்கப்பட்டுள்ள பின்னணியில், சில விடயங்களை தெளிவுபடுத்துவதற்காக, நான் மீண்டும் அதில் என் கவனத்தை செலுத்த எண்ணுகின்றேன். நாங்கள் மீண்டும் அந்த பழைய நிகழ்வுகளை மீட்டுப்பார்ப்போமா?
பதில் : ஆம், இந்த விடயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டப்படுவதை நானும் அவதானிக் கின்றேன். பழைய விடயங்கள் மீண்டும் தோண்டப்படுகின்றன. வழமைபோலவே சில உண்மைகள் சுயலாப நோக்கில் திரித்துக் கூறப்படுகின்றன அல்லது நசுக்கப்படுகின்றன. உண்மையில் சில அம்சங்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக இதில் எனக்குத் தெரிந்த யாவற்றையும் பற்றி நான் பேசத் தயாராக உள்ளேன்.
கேள்வி: சில வாரங்களின் முன்தான் நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இது தொடர்பாக பீ.பீ.ஸி செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்திருந்தார். ஐ.நாவின் உதவி யுடன் யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவர நோர்வே எவ்வாறு முயன்று கொண்டிருந்தது எனவும், இதற்காக உங்களை ஒஸ்லோவுக்கு கொண்டுவர அது எவ்வாறு முயன்று கொண்டிருந்தது எனவும் அவர் விசேடமாகக் குறிப்பிட்டிருந்தார்.
புலிகளின் தலைவர் உங்களை அவ்வாறு செய்ய விடாது தடுத்தார். இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்தியதற் காக சொல்ஹெய்ம், வெளிநாட்டு தமிழ் ஊடகங்களின் ஒரு பகுதி யினரால் கடுமையாக விமர்சிக்கப் பட்டுள்ளார். நாடு கடந்த தமிbழ அரசாங்கத்தின் பிரதமர் எனப்படும் விசுவநாதன் உருத்திரகுமாரன், சொல்ஹெய்மின் கூற்றுகளை வெளிப்படையாக மறுத்துள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து யாது?
பதில்: எரிக் கூறியது 100 சதவீதம் உண்மை. அவ்வாறான முயற்சிகள் நடந்தன. அவை ப் புலிகளின் தலைமையினால் தடுக் கப்பட்டன. இந்த மாதிரியான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக் கப்பட அனுமதிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு இரத்தம் சிந்தப்படாமல் தடுத்திருக்கலாம். எல்.ரி.ரி.ஈ. தலை வர்களில் பலர் இன்றும் உயிரோடு இருந்திருப்பர்.
கேள்வி: அவ்வாறாயின் அந்த நேரத்தில் அவ்வாறான முயற்சிகள் நடக்கவில்லையென உருத்திர குமாரன் ஏன் கூறவேண்டும்?
பதில்: உருத்திரகுமாரன் 2009 பெப்ரவரியில் நடந்ததைப்பற்றியே கூறுகின்றார். அவர் வேண்டுமென்றே பெப்ரவரியின் பின் நடந்தவற்றை தெரியாதவர் போல நடிக்கின்றார்.
கேள்வி: 2009 ஜனவரியில் புலிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட சர்வதேச உறவுகள் என்ற புதிய பகுதிக்கு நீங்கள் தலைவராக நியமிக்கப்பட்டீர்கள் என்பது பிரசித்தமானது. உங்களிடம் ஒரு யுத்த நிறுத்தத்தைக் கொண்டுவரும் பொறுப்பும் தரப் பட்டது. இதன் பின் என்ன நடந்தது என விபரமாகக் கூறுவீர்களா?
பதில்: ஆம் நிச்சயமாக. தமிbழ விடுதலைப் புலிகளின் முடிவு நெருங்கிவிட்டது என்பது 2008லேயே நிலைமையை அவதானித்தவர்களுக்கு விளங்கி விட்டது. இராணுவம் மெதுவாக ஆனால், உறுதியாக முன்னேறிக் கொண்டிருந்தது. தமிbழ விடுதலைப் புலிகள் வாயடித்தபோதும் பின்வாங்கிக் கொண்டிருந்தனர். ஏ-9 பிரதான வீதியின் மேற்கிலிருந்த பிரதேசங்களிலேயே அப்போது பெருமளவுக்கு மோதல்கள் இடம் பெற்று வந்தன.
இந்தப் பகுதிக்குள் இராணுவத்தின் பெரும்பகுதி குவிக்கப்படுவதற்கு முன் ஒரு கெளரவமான யுத்த நிறுத்தத்தை கொண்டுவருவது சாத்தியமானதாக இருந்தது. ஆனால், எல்.ரி.ரி.ஈ. தலைமையாலும் அதன் வெளிநாட்டு அமைப்புகளாலும் இதை விளங்கிக்கொள்ள முடிய வில்லை. புலிகளின் தலைமை மீண்டும் என் னோடு தொடர்புகளை ஏற்படுத்தி யது. 2008 இன் பிற்பகுதியில்தான் மக்களினதும் தமிbழ விடுதலைப் புலிகளின் தலைவர்களினதும் போராளிகளினதும் உயிர்களைக் காப்பாற்ற ஒரு யுத்த நிறுத்தத்தின் அவசியத்தை நான் வலியுறுத்திய போது தமிbழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் போராளிகள் சம்மதித்தது போல தெரிந்தது. ஆயினும், பிரபாகரன் விடயங்களை இழுத்தடித்தார்.
இறுதியாக 2008 முடிவில், ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டுவரும் பணியாணையுடன் என்னை புலிகள் இயக்கத்தின் சர்வதேச உறவுகள் பகுதிக்குப் பொறுப்பாக நியமிக்க பிரபாகரன் சம்மதித்தார். டிசெம்பர் 2008 லேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டபோதும் யுத்த நிறுத்தம் கொண்டுவரும் விடயத்தில் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் இழுத்தடித்தே வந்தது. பரந்தன், கிளிநொச்சி, மற்றும் ஆனையிறவு ஆகியவற்றின் ஒன்றன் பின் ஒன்றான வீழ்ச்சியோடு புதிய வருடம் பிறக்க இராணுவம் கணிசமான முற்பாய்ச்சல்களை மேற்கொண்டது.
இப்போதுதான் தலைமை விழித்துக்கொண்டது. என்னை ஒழுங்கான முறையில் நியமனம் செய்தது. ஆனால், வெளிநாட்டு விடயங்களுக்கு பொறுப்பாக இருந்த காஸ்ட்ரோ (வீரகத்தி மணிவண்ணன்) தனது பிரதிநிதியான நெடியவன் (பேரின்பநாயகம் சிவபரன்) என்ப வரின் மூலம் எனது பணிகளைக் குழப்பி வந்தார்.
எனக்குப் போதிய நிதி வளங்கள் தரப்படவில்லை. இப்படியிருந்த போதும் ஒரு யுத்த நிறுத்தத்தைக் கொண்டுவர நான் என்னாலான சகலவற்றையும் செய்தேன்.
கேள்வி: இதை நீங்கள் எவ்வாறு செய்தீர்கள்? நீங்கள் அவர்களுடன் நேரில் தொடர்புகொண்டீர்களா?
பதில்: நான் ஏராளமான கடிதங்கள், தொலைநகல்கள், மின்னஞ்சல்கள் அனுப்பினேன். இயன்ற வேளையில் அவர்களுடன் நேரில் தொடர் கொள்ளப்பட்டது. வேறு பல சந்தர்ப்பங்களில் நான் எனது பிரதிநிதிகளை அனுப்பினேன். முக்கிய ஆட்களுடன் நல்ல உறவு உள்ளவர்களை வேண்டுகோள் களை செய்ய பயன்படுத்தினேன்.
கேள்வி: இதில் நோர்வேயின் வகிபாகம் எவ்வாறு இருந்தது?
பதில்: யுத்த நிறுத்தம் மற்றும் சமாதான செயற்பாடு என்பவற்றுக்கு சான்றுறுதிப்படுத்திய அனுசரணையாளராக ஒஸ்லோ இருந்தது. யுத்தம் முழு அளவில் தொடங்கிய பின் நோர்வே எந்த அர்த்தமுள்ள பாத்திரத்தை வகிக்காதபோதும் அது இலங்கைபற்றி தொடர்ந்தும் விசனம் கொண்டிருந்தது.
கேள்வி: அப்படியாயின் ஒஸ்லோ என்ன செய்தது?
பதில்: சொல்ஹெய்ம் என்னோடு தொடர்பில் இருந்தார். ஒரு யுத்த நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்கான வழிவகைகளை ஆராயவென அமைதியான ஒரு கூட்டத்தை நடத்த நாம் தீர்மானித்தோம். 2008 பெப்ரவரி இறுதி வாரத்தில் இரகசியக் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டது.
கேள்வி: இந்தக் கூட்டம் எங்கே நடந்தது?
பதில்: அது மலேஷியாவின் தலைநகரான கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் நடந்தது. அது இரண்டு நாட்களாக நடந்தது.
கேள்வி: யார் யாரெல்லாம் பங்குபற்றினார்கள்? எரிக் சொல்ஹெய்ம் வந்தாரா?
பதில்: இல்லை. நோர்வே அமைச்சர் என்ற உயர் நிலையில் அவர் இருந்ததால் அவர் இதற்கு வருவது முறையாக இருக்கவில்லை. அவர் ஒரு முக்கிய நோர்வே அதிகாரியை தனது பிரதிநிதியாக அனுப்பியிருந்தார். இந்தக் கூட்டத்தில் வேறு இரண்டு நோர்வே அதிகாரிகளும் இலங்கைக்கான நோர்வேத் தூதுவரும் கலந்துகொண்டனர்.
கேள்வி: அவர் யார்?
பதில்: அப்போது கொழும்பிலிரு ந்த நோர்வே தூதுவர் ரோ ஹற்றெம் ஆவார். அவர் இப்போது ஆப்கானிஸ்தானில் இருக்கின்றார் என நான் நம்புகிறேன்.
கேள்வி: புலிகள் இயக்கத்தை பிரதிநிதித்துவம் செய்தவர் யார்? பதில்: நான், எனது செயலாளரும் உதவியாளருமான அப்பு என
அழைக்கப்படும் ஜோய் மகேஷ்வரன் மற்றும் உருத்திரகுமாரன் ஆகியோர்.
கேள்வி: இந்தப் பேச்சுகளின் போது என்ன நடந்தது?
பதில்: புலிகள் எனக்கு வழங்கிய பணியாணை யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வருதல் என இருந்தபடியால், நான் அந்த கூட்டத்தில் அதை முன்னிறுத் திப் பேசினேன். பொதுமக்களின் துன்பகரமான நிலைமைபற்றி நான் அழாக்குறையாகப் பேசினேன். அவர்களின் உயிர்களைக் காப்பாற்ற ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்பாடு செய்யும்படி நான் கெஞ்சினேன்.
கேள்வி: என்ன பதில் கிடைத்தது?
பதில்: அது எதிர்பார்க்காத பதில். ஹட்ரெம், நேரடியாகவும் ஒளிவு மறைவின்றியும் பேசினார். நாம் வெளிப்படையாகப் பேசுவோமா எனத் தொடங்கிய அவர் கசப்பான ஆனால் நிதர்சனமான உண்மைகளைக் கூறினார்.
கேள்வி: அவர் என்ன கூறினார்?
பதில்: அவர் முதலில் அப்போதைய கள நிலவரம்பற்றி உண்மையான ஒரு மதிப்பீட்டை எமக்கு எடுத்துரைத்தார். இலங்கை இராணுவம், இராணுவ ரீதியில் உச்சத்தில் இருப்பதை அவர் தெளிவாகக் கூறினார்.
தமbழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை தோற்கடிக்கப்போவது நிச்சயம் என அவர்கள் தெரிந்திருந்த அந்த நிலைமையில், இலங்கைக்கு ஒரு யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய எந்தத் தேவையுமில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment