Tuesday, November 27, 2012

புலிகளின் மாவீரர் தினத்திற்கான துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்!

Tuesday, November 27, 2012
இலங்கை::புலிகளின் மாவீரர் தினத்திற்கான துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஐவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

அந்த துண்டுப்பிரசுரங்களை அக்கரைப்பற்று பிரதேசத்தில விநியோகிப்பதற்காக முச்சக்கரவண்டியில் எடுத்துச்சென்றதாகக் கூறப்படும் ஐந்து பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து துண்டுப்பிரசுரங்களையும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே துண்டுப்பிரசுரங்கள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் இந்த 5 சந்தேக நபர்களும் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்தாக பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

No comments:

Post a Comment