Monday, October 1, 2012

மட்டுவில் காணாமல்போயிருந்த மூன்று மாணவர்கள் பொலிஸாரால் மீட்பு!

Monday, October 01, 2012
இலங்கை::மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் காணாமற்போயிருந்த மூன்று மாணவர்களும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று மாணவர்களும் நேற்று காலை அறநெறி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் அவர்கள் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment