Monday, October 1, 2012

முல்லைத்தீவு விஸ்வமடு காட்டுப் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புலிகள் இயக்கம் பயன்படுத்திய படகுகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன!

Monday, October 01, 2012
இலங்கை::முல்லைத்தீவு விஸ்வமடு காட்டுப் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புலிகள் இயக்கம் பயன்படுத்திய படகுகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவ் அதிகூடிய செயற்திறன் கொண்ட எஞ்சின்களைக் உடைய இப் படகுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் ஆயுதங்கள் சிலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

60 ரக மோட்டார் ரவைகள் 25, ஆர்.பீ.ஜீ ரக ரவைகள் இரண்டு, 40 மில்லி மீற்றர் கிரனைட் லோஞ்சர் ஒன்றுட் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment