Tuesday, October 30, 2012

(புலிகள் ஆதரவு) டெசோ தீர்மானங்களை ஐ.நா விடம் சமர்ப்பிக்க நாளை மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம்!

Tuesday, October 30, 2012
சென்னை::(புலிகள் ஆதரவு) டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா சபையில் சமர்ப்பிப்பதற்காக நாளை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணிக்கிறார்.

இலங்கை தமிழர் (புலிகள் ஆதரவு) நலன் கருதி கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் திமுக சார்பில் டெசோ மாநாடு நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா சபையினரிடம் சமர்ப்பிப்பது என முடிவு எடுக்கப்பட்டு, அந்த தீர்மானங்களை ஐ.நா சபையினரிடம் ஒப்படைக்க திமுக கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் அமெரிக்க செல்வார்கள் என்றும் கூறப்பட்டது.

அதன்படி, இது தொடர்பாக மு.க.ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, ::(புலிகள் ஆதரவு) டெசோ மாநாட்டு தீர்மானங்கள் குறித்த வரவு மனுவிற்கு கருணாநிதியிடம் ஒப்புதல் பெற்றனர்.

நாளை மாலை இருவரும் அமெரிக்கா செல்கிறார்கள். ஐ.நா சபையில் டெசோ சார்பில் மனு அளித்துவிட்டு திரும்பும் இவர்கள், அப்படியே நவம்பர் 6ஆம் தேதி லண்டனில் நடைபெற இருக்கும் பிரிட்டன் தமிழர் பேரவை உலக தமிழ் மாநாட்டிலும் கலந்துகொள்கிறார்கள்

No comments:

Post a Comment