Tuesday, October 30, 2012

பத்திரிகையாளரை தாக்கிய பிரச்சனை - முன் ஜாமீன் கோரி விஜயகாந்த் மனு தாக்கல்!

Tuesday, October 30, 2012
சென்னை::பத்திரிகையாளரை தாக்கியது தொடர்பான பிரச்சனையில் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்றார். அப்போது அவருடைய கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏக்கள் முதல்வரை சந்தித்தது தொடர்பாக கேள்வி கேட்டனர். இதைத் தொடர்ந்து வியஜகாந்த் நிருபர்களை திட்டியதாகவும், பிறகு அந்த நிருபர் கீழே தள்ளி விடப்பட்டார். கீழே விழுந்த அந்த நிருபர் மீனம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விஜயகாந்தின் மீது, கொலை மிரட்டல் 506(ப்), தரக்குறைவாக பேசுதல் (294பி), தன்னிச்சையாக சிறு காயம் ஏற்படுத்துதல் (323), முறையற்று தடுத்தல் (341) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனால் விஜயகாந்த் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் முன் ஜாமீன் கேட்டி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "என்னுடைய தனிப்பட்ட வேலை காரணமாக மதுரைக்கு செல்ல அவசரமாக விமான நிலையம் சென்று கொண்டு இருந்தேன். அப்போது விமான நிலையத்தில் இருந்த பத்திரிக்கையாளர்கள் அத்துமீறி கேள்வி கேட்டனர். அவர்களை விலக்கி கொண்டு உள்ளே சென்றேன்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டு அதன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நான் கைது செய்ய நேரிடலாம் என்று அஞ்சுகிறேன். எனவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் கொடுக்க வேண்டும்." என்று விஜயகாந்த் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment