Wednesday, September 26, 2012

புலிகள் அமைப்பில் தமிழ் பெண்களை பயங்கரவாத செயற்படுகளில் ஈடுபடுத்திய அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக போர் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - இலங்கை!

Wednesday, September 26, 2012
இலங்கை::ஆறாயிரம் தமிழ் பெண்களை பயங்கரவாத செயற்படுகளில் ஈடுபடுத்துவதற்காக, புலிகள் அமைப்பில் அவர்களை கட்டாயமாக சேர்த்த அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக போர் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம், பிரித்தானியா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான பல சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அரசாங்கம்; கூறியுள்ளது.


அடேல் பாலசிங்கம் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார். தற்கொலை குண்டு தாக்குதல்களை அங்கீகரித்து அவர் ஆற்றிய உரை அடங்கிய பதிவுகள் வன்னி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என திவயின தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment