Friday, September 28, 2012

கட்சி இணக்கப்பாடு இருந்தால் முதலமைச்சர் பதவியை பங்குபோடலாம் - கெஹெலிய ரம்புக்வெல!

Friday, September 28, 2012
இலங்கை::கிழக்கு மாகாகண சபை முதலமைச்சர் பதவியை ஐக்கிய மக்கள் சுதநதிர முன்னணியும் -ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸும் தலா இரண்டரை வருடங்களுக்கு பங்குபோட்டுக்கொள்ள அரசியலமைப்பில் இடமில்லாதபோதும் இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக இது சாத்தியமே என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தகவல் ஊடக அமைச்சில் இடம்பெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்:
ஐந்து வருடகால முதலமைச்சர் பதவியை பாதி காலத்துக்கு இருவர் பகிரந்து கொள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. ஆனால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட ஒருவரை இடையில் பதவியில் இருந்து நீக்கவதற்கு சட்டத்தில் இடமுண்டு.
எனினும் இரு கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டால் அதன் மூலம் முதலமைச்சர் பதவியை இருவர் பகிர்ந்துகொள்ளலாம். அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment