Sunday, September 23, 2012
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த மேலும் 85 பேர் பருத்தித்துறை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இரண்டு படகுகளில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
ஒரு படகில் பயணித்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது பருத்தித்துறை பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதேவேளை மற்றைய படகு நீர்கொழும்பு பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment