Saturday, September 29, 2012
திருவனந்தபுரம்::கோல்லம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஆட்கடத்தலுடன் தொடர்புடைய 15 இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு திருப்பியனுப்பப்படவுள்ளனர்!
கோல்லம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஆட்கடத்தலுடன் தொடர்புடைய 15 இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு திருப்பியனுப்பப்படவுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் கடந்த 17ஆம் திகதி நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதை அடுத்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதாக த ஹிந்து ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த 15 இலங்கையர்களும் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து இன்று திருப்பி அனுப்பப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் நிறைவடையும் வரை நலன்புரி நிலையமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் 15 பேரும் இந்த நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய குடிவரவு சட்டத்திற்கமைய உரிய ஆவணங்கள் இன்றியும் சிறுவர்கள் மற்றும் பெண்களுடன் 151 பேரை சட்டவிரோதமாக மீன்பிடி படகொன்றில் அவுஸ்திரேலியாவுக்கு கடத்தியதாகவும் இவர்கள் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த 15 இலங்கையர்களும் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து இன்று திருப்பி அனுப்பப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் நிறைவடையும் வரை நலன்புரி நிலையமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் 15 பேரும் இந்த நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய குடிவரவு சட்டத்திற்கமைய உரிய ஆவணங்கள் இன்றியும் சிறுவர்கள் மற்றும் பெண்களுடன் 151 பேரை சட்டவிரோதமாக மீன்பிடி படகொன்றில் அவுஸ்திரேலியாவுக்கு கடத்தியதாகவும் இவர்கள் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment